உணவில் எலி மருந்து... இரு தங்கைகள் கொலை... அண்ணன் செய்த அடாத செயல்!

கொலை செய்யப்பட்ட தங்கைகள்
கொலை செய்யப்பட்ட தங்கைகள்

தந்தையின் சொத்துக்கள் மற்றும் கருணை அடிப்படையிலான வேலை ஆகியவற்றுக்கு ஆசைப்பட்ட அண்ணன்,  தனது சொந்த தங்கைகளை  உணவில் எலி மருந்து வைத்து கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ராய்காட் மாவட்டம், அலிபாக் பகுதியில் வசித்து வருபவர் கணேஷ் மோகித்.  இவரின் சகோதரிகள் சோனாலி சங்கர் மோஹித் ( 34), சினேகா சங்கர் மோஹித் (30). இவர்களில் சோனாலி கடந்த அக்டோபர் 16 ம் தேதி திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அதற்கு அடுத்த நாள் சோனாலியின் தங்கையான சினேகா சங்கர் மோஹித் ( 30), அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மேல் சிகிச்சைக்காக பன்வேலில் உள்ள எம்.ஜி.எம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் அவரும் சிகிச்சை பலனின்றி அக்டோபர் 20ம் தேதி உயிரிழந்தார்.

உயிரிழப்பதற்கு முன்னதாக சினேகா போலீஸ் அதிகாரிகளிடம் தனது மரணத்தில் சந்தேகம் உள்ளதாக வாக்கு மூலம் கொடுத்திருக்கிறார். அவரது  சகோதரரின் மீது  சந்தேகப்படுவதாகவும்,  உணவில் விஷப்பொருள் ஏதேனும் கலந்திருக்கலாம் எனவும் அவர் கூறியிருக்கிறார். இதனையடுத்து, களத்தில் இறங்கிய காவல்துறையினர் நடத்திய விசாரணையில், சொத்துக்காக சொந்த தங்கைகளை அண்ணன் கொலை செய்த பயங்கரம் தெரியவந்தது.

கடந்த 2009 ம் ஆண்டு கணேஷ் மோகித்தின் தந்தை வனத்துறையில் பணியாற்றி மறைந்துள்ளார். அவரது வேலையை கருணை அடிப்படையில் தனது மகள்களுக்கு அளிக்க கணேஷ் மோகித்தின் தாய் விரும்பியுள்ளார். மேலும்,  பணத்தை மகனிடம் கொடுக்கவும், சொத்துக்களை சரி பங்காக மூவருக்கு பிரிக்கவும் எண்ணி இருக்கிறார்.

கைது செய்யப்பட்ட கணேஷ் மோகித்
கைது செய்யப்பட்ட கணேஷ் மோகித்

இதில் விருப்பமில்லாத கணேஷ் முதலில் சம்மதிப்பதுபோல நடித்து, பின் பிரச்சனை செய்ய தொடங்கி இருக்கிறார். மேலும், போலியான ஆவணங்கள் கொண்டு சொத்துக்களை தனது பெயருக்கு மாற்றவும், வனத்துறை வேலையை தான் வாங்கவும் முயற்சிகள் நடைபெற்ற நிலையில், அவை தோல்வியுற்றன. 

இறுதியாக அனைவரும் ஒன்று சேர்ந்து தந்தையின் பணி மற்றும் வருவாயை பிரித்துக் கொள்ளலாம் என பேச்சுவார்த்தை நடந்த நிலையில், சொத்துக்களை பிரிக்க மனம் இல்லாத கணேஷ் தனது தங்கைகளை கொலை செய்ய திட்டமிட்டு இருக்கிறார். அவரின் திட்டப்படி உணவில் எலி மருந்து கலந்து கொடுத்து கொலை கொலை செய்தது தெரியவந்துள்ளது. இந்த அதிர்ச்சி தகவலை விசாரணையில் உறுதிப்படுத்திய காவல்துறையினர், கொலைகளை செய்த கணேஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in