ஆந்திராவில் சோகம்- சிறுவன் உடலை 40 கி.மீ. தூரம் பைக்கில் எடுத்துச் சென்ற தந்தை!

ஆந்திரா சிறுவன் பலி
ஆந்திரா சிறுவன் பலி

ஆந்திர மாநிலம் ஸ்ரீ சத்ய சாய் மாவட்டம் அமரபுரம் மண்டலம் அனுமந்துனி பல்லே என்ற கிராமத்தை சேர்ந்தவர் லிங்கப்பா. விவசாயியான இவருடைய மகன் ருஷி கடந்த சில நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று அதிகாலை சிறுவனுக்கு வலிப்பு ஏற்பட்டதாக தெரிகிறது. உடனடியாக லிங்கப்பா 108 ஆம்புலன்ஸுக்கு போன் செய்து வரவழைத்தார். விரைந்து வந்த ஆம்புலன்ஸ் மூலம் 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிறுவனை கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.

மருத்துவமனையில் பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து சிறுவனின் உடலை வீட்டிற்கு எடுத்துச் செல்ல உதவுமாறு ஆம்புலன்ஸ் ஊழியர்களிடம் லிங்கப்பா அழுதபடி கேட்டார். ஆனால் 108 ஆம்புலன்சில் இறந்தவர்களின் உடலை கொண்டு செல்ல அனுமதி இல்லை என்று கூறிவிட்டு ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சென்றுவிட்டனர். இதனால் லிங்கப்பா அவரது உறவினர் ஒருவரை வரவழைத்து, மகனின் உடலை 40 கிலோ மீட்டர் தூரம் பைக்கில் தூக்கிச் சென்றார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு, கண்டனமும் எழுந்தது. இதையடுத்து, வருவாய்த்துறை அதிகாரிகள் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in