சேலத்தில் தனது இரண்டு குழந்தைகள் மற்றும் காதல் கணவரை விட்டு விட்டு இன்ஸ்டாகிராமில் பழகிய வாலிபரோடு இளம்பெண் தலைமறைவான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம், ஓமலூர் தொளசம்பட்டி அருகே கிழக்கூர் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்தி (29). இவருடைய மனைவி சுதர்சனா (28).கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக சுதர்சனா இன்ஸ்டாகிராமை பயன்படுத்தி வருகிறார். அப்போது ஒரு இளைஞருடன் சுதர்சனாவிற்கு பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக சுதர்சனா இன்ஸ்டாகிராமை அதிகம் பயன்படுத்தி வந்துள்ளார். இதை கார்த்தி கண்டித்துள்ளார்.
ஆனாலும், இன்ஸ்டாகிராம் பயன்படுத்துவதை சுதர்சனா சிறுத்தவில்லை. இதனால் கார்த்திற்கும், சுதர்சனாவிற்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் தனது இரண்டு குழந்தைகளை விட்டு விட்டு சுதர்சனா திடீரென தலைமறைவானார்.
இதனால் அதிர்ச்சியடைந்த கார்த்தி, காவல் நிலையத்தில் புகார் செய்தார். இது தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது மேச்சேரி பகுதியைச் சேர்ந்த மாதேஸ் என்ற வாலிபருடன் சுதர்சனா தலைமறைவானது தெரிய வந்தது. இதையடுத்து இன்ஸ்டாகிராம் காதலன் மாதேசுடன் தலைமறைவான சுதர்சனாவை போலீஸார் தேடி வருகின்றனர்.
இரண்டு குழந்தைகளை விட்டு விட்டு இன்ஸ்டாகிராமில் பழகிய வாலிபருடன் இளம்பெண் தலைமறைவாகியுள்ள சம்பவம், சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.