நடிகை நிக்கி கல்ராணி வீட்டில் திருட்டு!

மாறி மாறி புகார் அளித்ததால் திணறிய போலீஸ்
நடிகை நிக்கி கல்ராணி
நடிகை நிக்கி கல்ராணிhindu

தனது வீட்டில் பணியாற்றி வந்த வேலைக்காரர் ஒருவர் விலை உயர்ந்த கேமரா, துணிகளை திருடி சென்றுவிட்டதாக சென்னை அண்ணாசாலை போலீஸ் நிலையத்தில் நடிகை நிக்கி கல்ராணி புகார் அளித்துள்ளார். தனது மகனை நடிகை நிக்கி கல்ராணி அடைத்து வைத்துள்ளதாக வேலைக்காரரின் பெற்றோரும் புகார் அளித்துள்ளதால் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை ராயப்பேட்டை அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் பிரபல நடிகை நிக்கி கல்ராணி. இவர் மொட்ட சிவா கெட்ட சிவா, மரகத நாணயம் உட்பட பல திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர். சமீபத்தில் நடிகர் சசிகுமார் நடிப்பில் வெளியான ராஜவம்சம் படத்தில் நிக்கிகல்ராணி கதாநாயகியாக நடித்துள்ளார்.

இந்த நிலையில் ஜனவரி 11ஆம் தேதி நடிகை நிக்கிகல்ராணி அண்ணாசாலை காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் தன் வீட்டு வேலைக்காக தனியார் ஏஜென்சி மூலம் தனுஷ் என்பவரை நியமித்ததாகவும் 11ஆம் தேதி வீட்டில் வேலை பார்க்க வந்த தனுஷ் வீட்டிலிருந்து சந்தேகத்திற்கிடமாக பையில் சில பொருட்களை எடுத்து செல்வதை பார்த்து அவரை பிடிக்க முயன்ற தப்பி ஓடி விட்டதாக புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

உடனே வீட்டில் உள்ள பொருட்களை ஆய்வு செய்த போது 40 ஆயிரம் மதிப்பிலான கேமரா, விலை உயர்ந்த துணிகள், உள்ளிட்ட சில பொருட்கள் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்ததாக தெரிவித்துள்ள நடிகை நிக்கி, வீட்டிலிருந்து பொருட்களை திருடி சென்ற ஊழியர் தனுஷ் மீது நடவடிக்கை எடுத்து தனது பொருட்களை மீட்டு தருமாறு புகாரில் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே விசிக பிரமுகரான செல்லதுரை என்பவர் அண்ணாசாலை காவல் நிலையத்தில் நடிகை நிக்கி கல்ராணி மீது புகார் அளித்துள்ளார்.. அதில் நடிகை நிக்கி கல்ராணி வீட்டில் வேலைப்பார்க்கும் தனுஷ், நடிகை வீட்டில் பொருட்களை திருடியதற்காக அவரை சட்டவிரோதமாக அடைத்து வைத்துள்ளதாக தனுஷின் பெற்றோர்கள் தன்னிடம் கூறியதுடன் தனுஷை மீட்க உதவி செய்யுமாறு கேட்டு கொண்டதாக புகாரில் தெரிவித்துள்ளார்.

நடிகை நிக்கி கல்ராணி
நடிகை நிக்கி கல்ராணிhindu

மேலும் கடந்த 13 தேதி விருத்தாசலத்தில் இருந்து சென்னைக்கு வந்த தனுஷின் தாய் நாகவல்லி மற்றும் அவரது தந்தை, மகனை பல இடங்களில் தேடியும் காணவில்லை. எனவே தங்கள் மகனை கண்டுபிடித்து தருமாறு அண்ணாசாலை காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதனால் குழப்பமடைந்த அண்ணா சாலை போலீசார் நிக்கி கல்ராணி வீட்டிலுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் தனுஷ் பொருட்களை திருடி செல்வது போன்ற காட்சிகள் பதிவாகி இருந்தது. இதனையடுத்து போலீசார் இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் தனுஷ் திருப்பூரில் பதுங்கி இருப்பது தெரியவந்தது.

உடனே தனிப்படை போலீசார் அங்கு சென்று தனுஷை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் நிக்கி கல்ராணியின் வீட்டில் திருடிய கேமராவை கோயம்புத்தூரில் ஒரு கடையில் விற்று விட்டு பின்னர் திருப்பூரில் தனது நண்பர் வீட்டிற்கு வந்து தங்கியது தெரியவந்தது. மேலும் அவர் அளித்த தகவலின் பேரில் விருத்தாசலத்தில் உள்ள தனுஷின் வீட்டில் சோதனை செய்து நாய் முடி அகற்றும் இயந்திரம் மற்றும் நிக்கி கல்ராணியின் ஆடைகள் சிலவற்றை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே நடிகை நிக்கி கல்ராணி திடீரென தனுஷ் மீது அளித்த புகாரை வாபஸ் பெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in