வேலை தேடி வந்த இளம்பெண் பலாத்காரம்... ஓசூரில் பதற வைத்த சம்பவம்!

வேலை தேடி வந்த இளம்பெண் பலாத்காரம்... ஓசூரில் பதற வைத்த சம்பவம்!

ஓசூரில் வேலை வாங்கித் தருவதாக கடலூர் இளம்பெண்ணை அழைத்து பாலியல் பலாத்காரம் செய்த இளைஞரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

கடலூர் மாவட்டம், விருத்தாச்சலம் அருகே உள்ள கீழப்பாவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் (26) இவர் ஓசூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது உறவினர் ஒருவர் தனக்குத் தெரிந்த இளம் பெண்ணுக்கு ஓசூரில் வேலை வாங்கித் தருமாறு மணிகண்டனை நாடியுள்ளார்.

இதனால் வேலை வாங்கித் தருகிறேன் என்று கூறிய மணிகண்டன், அந்த இளம் பெண்ணின் செல்போனில் பேசி ஒசூருக்கு அழைத்துள்ளார். அந்த பெண்ணும் வேலை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் ஓசூருக்கு வந்துள்ளார். அவரை ஓசூர் பாகலூர் சாலையில் ஆள்நடமாட்டம் இல்லாத இடத்திற்கு மணிகண்டன் அழைத்துச் சென்றுள்ளார்.

அந்த இடத்தைப் பார்த்து பயந்துபோன அந்த இளம்பெண்ணை, மணிகண்டன் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த இளம்பெண், தன்னைக் காப்பாறுமாறு கதறியடித்துக் கொண்டு மணிகண்டனிடமிருந்து தப்பியோடி ஓடியுள்ளார். இந்த சம்பவத்தைப் பார்த்த பொதுமக்கள், அந்த பெண்ணை ஓசூர் நல்லூர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு இளம்பெண், மணிகண்டன் மீது புகார் அளித்தார்.

இச்சம்பவம குறித்து விசாரணை மேற்கொண்ட போலீஸார், இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற மணிகண்டனை கைது செய்தனர். இதனையடுத்து அவரை ஓசூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மணிகண்டனால் பாதிக்கப்பட்ட அந்த இளம் பெண் ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் ஓசூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in