அதிர்ச்சி... மதுபோதையால் நண்பனை இரும்பு ராடால் அடித்துக்கொன்ற வாலிபர் கைது

சரவணன்
சரவணன்

சென்னையில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் நண்பனை‌ இரும்பு ராடால் அடித்துக்கொலை செய்த வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை புழல் அறிஞர் அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (33). இவர் பெயிண்டராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி செல்வி என்ற மனைவியும் குழந்தையும் உள்ளனர். சரவணன் மதுவுக்கு அடிமையானதால் தினமும் குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறு ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் கணவன், மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக செல்வி பிரிந்து சென்று தனது தாயுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு 11 மணி அளவில் சரவணன் தனது நண்பரான புழல் திருவள்ளூர் தெருவை சேர்ந்த மணி(21) என்பவருடன் சேர்ந்து அறிஞர் அண்ணாநகர் முதல் தெருவில் அமர்ந்து மது அருந்தியுள்ளனர்.

கைதான மணி
கைதான மணி

அப்போது போதை தலைக்கேறி இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதில் ஆத்திரமடைந்த மணி அருகில் இருந்த இரும்பு ராடை எடுத்து சரவணன் தலைமையில் அடித்துக்கொலை செய்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனே புழல் போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் பெயரில் அங்கு வந்த போலீஸார் சரவணன் உடலை கைப்பற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மது போதையில் சரவணன் உடல் அருகே படுத்திருந்த மணியை பிடித்துச் சென்றனர். பின்னர் இந்த கொலை தொடர்பாக வழக்குப் பதிவு செய்த புழல் போலீஸார் மணியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மதுபோதையில் ஏற்பட்ட வாய்த்தகராறில் நண்பனை இரும்பு ராடால் அடித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in