ஆண் நண்பர்களுடன் செல்போனில் அரட்டை... கண்டித்த அண்ணனை கோடாரியால் வெட்டிக்கொன்ற 14 வயது சிறுமி!

ஆண் நண்பர்களுடன் செல்போனில் அரட்டை... கண்டித்த அண்ணனை கோடாரியால் வெட்டிக்கொன்ற 14 வயது சிறுமி!

ஆண் நண்பர்களுடன் அடிக்கடி செல்போனில் பேசாதே எனக் கண்டித்த தனது சகோதரரை கோடாரியால் 14 வயது சிறுமி வெட்டிக்கொலை செய்த சம்பவம் சத்தீஸ்கரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா காலத்திற்குப் பிறகு சிறியவர் முதல் பெரியவர் வரை செல்போன் பயன்பாடு அதிகமாகி விட்டது. சிறுகுழந்தைகள் முதல் பெரியவர் வரை கல்வி நிலையங்களில் நடத்தப்படும் பாடங்களை அறிந்து கொள்ள செல்போன் முக்கியமான சாதனமாக உள்ளது. இதன் காரணமாக நீண்ட நேரமாக செல்போனுடன் குழந்தைகள் நேரம் செலவிடும் நிலையும் ஏற்படுகிறது.

செல்போன்
செல்போன்

பாடங்களுக்காக பயன்படுத்த பெற்றோரோ, குடும்பத்தினரோ வழங்கும் செல்போனைக் கொண்டு தேவையில்லாத நபர்களிடம் அரட்டை அடிக்கும் வேலையையும் சிலர் செய்கின்றனர். அப்படி அரட்டை அடித்த 14 வயது சிறுமியைக் கண்டித்த தனது சகோதரன் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம், சத்தீஸ்கர் மாநிலம், அம்லிதிகல கிராமத்தில் நடைபெற்றுள்ளது.

சுய்கான் காவல் நிலையத்திற்குட்பட்ட கிராமத்தில் வசித்து வரும் அந்த சிறுமியின் குடும்பத்தினர் வேலக்காக வெளியே சென்றிருந்தனர். அப்போது சிறுமியுடன் அவரது 18 வயது சகோதரர் வீட்டில் இருந்துள்ளார். அப்போது செல்போனில் ஆண் நண்பர்களுடன் சிறுமி நீண்ட நேரம் அரட்டையடிப்பதைக் கண்ட அவரது சகோதரர் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த சிறுமி, வீட்டில் இருந்த கோடாரியை எடுத்து வந்து உறங்கிக் கொண்டிருந்த தனது சகோதரனை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே அவரது சகோதரர் உயிரிழந்துள்ளார்.

இதன்பின் தனது ஆடையில் இருந்த ரத்தக்கறையைச் சுத்தம் செய்து விட்டு தனது சகோதரனை யாரோ கொலை செய்து விட்டதாக அந்த சிறுமி கூறியுள்ளார். ஆனால், போலீஸார் விசாரணையில் தனது சகோதரரை சிறுமி தான் கொலை செய்தார் என்பது தெரிய வந்தது.

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார், அந்த சிறுமியை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம் நடைபெற்ற இந்த சம்பவம் தற்போது தான் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in