அதிர்ச்சி... மளிகைக் கடைக்காரருக்கு ஆசை காட்டிய கல்லூரி மாணவி... அதன் பின் நடந்த விவகாரம்!

கைது செய்யப்பட்டவர்கள்
கைது செய்யப்பட்டவர்கள்

மளிகை கடைக்காரருக்கு ஆசை காட்டி  அழைத்துச் சென்ற கல்லூரி மாணவி ஒருவர்  அவரது தோழர்களுடன் சேர்ந்து மிரட்டி பணம் பறித்துள்ள சம்பவம் புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி வில்லியனூர் கூடப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் கருணாகரன் (50).  மளிகைக்கடை நடத்தி வரும் இவரிடம்  கடந்த 12-ம் தேதியன்று இளம்பெண் ஒருவர் வந்து அறிமுகம் செய்து கொண்டிருக்கிறார்.  தன் பெயர் வனிதா (19) என்றும், புதுச்சேரி நகரப்பகுதியில் உள்ள அரசு கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருவதாகவும் கூறிய  அவர், பெற்றோர்கள் இல்லாத நிலையில்  வில்லியனூர் கணவாபேட்டையில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருப்பதாகவும்,  உறவினர்களுக்கும் தனக்கும் கருத்து வேறுபாடு இருப்பதால் வீடு வாடகைக்கு வேண்டும் என்றும் கேட்டுள்ளார்.

கருணாகரன் வீட்டின் மேல் பகுதியில் காலியாக உள்ள அறையை தமக்கு வாடகைக்கு தரும்படியும் கேட்டுள்ளார். இதையடுத்து இரண்டு நாட்களுக்கு பிறகு தன்னை வந்து பார்க்கும்படி கருணாகரன் கூறியதால், அவரது செல்போன் எண்ணை பெற்றுள்ளார் வனிதா. இதைத்தொடர்ந்து  கருணாகரனுக்கு செல்போனில்  பேசி வந்துள்ளார்.

ஒரு கட்டத்தில் அவரை வெளியில் அழைத்துள்ளார். இதனால் இருவரும் அவ்வப்போது வெளியில் சந்தித்து பேசி வந்துள்ளனர். இந்த சூழலில் வனிதா,  இரவு நேரத்தில் இவரை தனியாக அழைத்துள்ளார். இவரும், உடனே சம்பவத்தன்று இரவு தனது பைக்கில் வனிதாவை கூட்டிக்கொண்டு வில்லியனூர் கணூவாப்பேட்டை பகுதியில்  உள்ள காட்டுப்பகுதி ஒன்றுக்கு சென்றுள்ளார்.

அவரது  ஆடைகளை கழற்றுமாறு வனிதா கூறிய நிலையில்  அங்கே மறைந்திருந்த கும்பல் ஒன்று, இதனை வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்துள்ளனர். அத்துடன்  அவரை  பிடித்து வைத்து, பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். ரூ.2 லட்சம் கொடுக்க வேண்டும் என்றும், அப்படி பணம் தரவில்லை என்றால் வீடியோவை வெளியிட்டு விடுவதாக மிரட்டியுள்ளனர்.

வனிதா, கருணாகரன்
வனிதா, கருணாகரன்

இதனால் பயந்துபோன கருணாகரன், தான்  கொண்டு வந்த ரூ.50 ஆயிரம் பணத்தை அவர்களிடம் கொடுத்ததோடு, தனது நண்பரிடம் அலைபேசியில் பேசி  ரூ.75 ஆயிரம் பணத்தை கூகுள் பே மூலமாக அனுப்பியுள்ளார். பின்னரே அவர்கள் கருணாகரனை விட்டுள்ளனர். அங்கிருந்து தப்பிய  கருணாகரன், உடனே இதுகுறித்து வில்லியனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீஸார் பணம் அனுப்பிய ஜி-பே எண்ணை தடயமாக வைத்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது கருணாகரனிடம் பணப்பறிப்பில் ஈடுப்பட்டது கணுவாப்பேட்டை பகுதியை சேர்ந்த பப்லு என்கிற பிரகாஷ் (21) மற்றும் ராமு (22) என்று தெரியவந்தது. இதையடுத்து அவர்களை கைது செய்த போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். 

விசாரணைக்குப் பின்னர் கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்த போலீஸார், தலைமறைவாக உள்ள கல்லூரி மாணவி வனிதா மற்றும் அவரது கூட்டாளி அருண் என்பவரை  தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in