அழகுசாதன கிரீம் டப்பாவில் வைத்து கடத்திய 640 கிராம் தங்கம் பறிமுதல்... கொச்சியில் பரபரப்பு!

அழகுசாதன கிரீம் டப்பாவில் வைத்து கடத்திய 640 கிராம் தங்கம் பறிமுதல்... கொச்சியில் பரபரப்பு!

கொச்சி விமானநிலையத்தில் சுங்கத்துறையினர் 36 லட்சம் மதிப்பிலான தங்க வளையல்களை வைத்திருந்த பெண் ஒருவரைக் கைது செய்தனர்.

கேரள மாநிலம் கொச்சி விமான நிலையத்தில் இத்தாலியில் இருந்து விமானத்தில் வந்த பயணிகளை அதிகாரிகள் சோதனையிட்டனர். கோழிக்கோட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் 640 கிராம் எடை கொண்ட ரூ.36 லட்சம் மதிப்புள்ள தங்க வளையல்களை கடத்தி வந்திருப்பது தெரியவந்தது.

தங்கம் பறிமுதல்
தங்கம் பறிமுதல்

ஜோசியை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 640.39 கிராம் எடை கொண்ட வளையல்கள் கைபற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மேலும் அந்த வளையல்கள் நிவியா கிரீம் டப்பாவிற்குள் மறைத்துக் கொண்டுவரப்பட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

மேலும் கைது செய்யப்பட்ட பெண் கோழிக்கோட்டைச் சேர்ந்த ஜோசி என்பதும் அவர் இத்தாலியிலிருந்து கொச்சினுக்கு விமானத்தில் வந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அந்த வளையல் சுங்கத்துறையால் கைப்பற்றப்பட்டுள்ளன. இதுகுறித்த கூடுதல் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

தங்கம்
தங்கம்

ஒரு வாரத்திற்கு முன்பாக் சௌதி அரேபியாவின் ஜெடாநகரிலிருந்து கொச்சி வந்த விமானப் பயணிகளிடம் நடத்திய சோதனையில் 52 லட்சம் மதிப்பிலான தங்கம் கொச்சி சுங்கத் துறையால் கைப்பற்றதுகுறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in