இடி தாக்கியதில் பறிபோன சிறுவனின் உயிர்: மாடு பிடிக்கச் சென்றபோது நடந்த சோகம்

உயிரிழந்த சிறுவன் அர்ஜுன்
உயிரிழந்த சிறுவன் அர்ஜுன்

மேலூர் அருகே மேய்ச்சலுக்குச் சென்ற மாட்டை தனது உறவினர்களுடன் பிடிப்பதற்காக சென்ற 6 வயது சிறுவன் இடி தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை மாவட்டம், மேலூர் அருகே உள்ள அழகர்கோவில் கோட்டை வாசலை சேர்ந்தவர்கள் அம்மாசி- சுனிதா தம்பதியர். இவர்களது 6 வயதான மகன் அர்ஜுன். அவர்களது வீட்டின் அருகே உள்ள வயல் பகுதியில் மாட்டினை மேய்ச்சலுக்காக விட்டுள்ளனர். இந்நிலையில், நேற்று மாலை சிறுவன் அர்ஜுன் அவனது உறவினர்களுடன் மாட்டை பிடிப்பதற்காக சென்றுள்ளான். அப்போது, இடி தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளான்.

தொடர்ந்து, தகவல் அறிந்து நேரில் வந்த மேலவளவு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்விற்காக மேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in