பாட்னா ரயில் நிலையம் அருகே இன்று காலை ஹோட்டல் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அங்கு மீட்புப் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
பீகார் மாநிலம், பாட்னா சந்திப்பு ரயில் நிலையம் அருகே உள்ள ஒரு ஹோட்டல் கட்டிடத்தில் இன்று காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு ஊர்க்காவல் படையினர், தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
எனினும் இந்த விபத்தில் இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர். 20க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். தீ விபத்து சம்பவம் தொடர்பாக ஊர்க்காவல் படை, தீயணைப்பு துறை இயக்குநர் ஜெனரல் ஷோபா ஓஹத்கர் கூறுகையில், “நாங்கள் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஹோட்டல்களில் தீ தடுப்பு தயார் நிலை குறித்து ஆய்வு செய்துள்ளோம்.
ஆய்வுப் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. ஆய்வில் முக்கியமான அறிவுறுத்தல்கள் வழங்கப்படுகின்றன. சிலர் அவற்றை பின்பற்றுகிறார்கள். மற்றவர்கள் பின்பற்றாமல் அலட்சியம் காட்டுகின்றனர். இன்றைய தீ விபத்தானது சிலிண்டர் வெடித்ததால் ஏற்பட்டதாக தெரிகிறது.
காலை 11 மணியளவில் தகவல் கிடைத்ததும் விரைந்து வந்து, தீயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளோம். உரிய விசாரணை மூலம் காரணம் கண்டறியப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படும்.” என்றார்.
இதையும் வாசிக்கலாமே...
கைதானவங்க நம்மாளுங்க தான்; ஆனா ரூ.4 கோடி எனதில்லை... நயினார் நாகேந்திரன் விளக்கம்!
அதிர்ச்சி... ஜிஎஸ்டி அலுவலகத்தில் அதிகாரியின் மண்டை உடைப்பு: சென்னையில் பரபரப்பு!
நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு... நாட்டின் கவனம் ஈர்க்கும் நட்சத்திரத் தொகுதிகள் இவைதான்!
முன்பு முதலை, இப்போது சிறுத்தை... படுகாயங்களுடன் உயிர் பிழைத்த முன்னாள் கிரிக்கெட் வீரர்!