நூதன முறையில் தங்கம் கடத்தல்... ரூ.29 லட்சம் மதிப்புள்ள தங்கம் பிடிபட்டது!

செருப்புக்குள் வைத்து மறைத்து எடுத்து வரப்பட்ட தங்கம் பறிமுதல்
செருப்புக்குள் வைத்து மறைத்து எடுத்து வரப்பட்ட தங்கம் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் செருப்பில் மறைத்து வைத்து கடத்தி வரப்பட்ட 28 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 400 கிராம் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

சென்னை, கோவை, திருச்சி, தூத்துக்குடி உள்ளிட்ட விமான நிலையங்களில் கடந்த சில மாதங்களாக தடை செய்யப்பட்ட போதைப் பொருள் மற்றும் சட்டவிரோதமாக தங்கம் கடத்தி வரப்படுவது அதிகரித்து வருகிறது. இதனால் சுங்கத்துறை அதிகாரிகள் மற்றும் மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் தொடர் சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் அவ்வப்போது போதைப்பொருள் மற்றும் கடத்தல் தங்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.

திருச்சி விமான நிலையம்
திருச்சி விமான நிலையம்

இதன் ஒரு பகுதியாக திருச்சி விமான நிலையத்திற்கு இன்று காலை சிங்கப்பூரிலிருந்து வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ஆண் பயணி ஒருவர் அணிந்திருந்த செருப்பு வித்தியாசமாக தெரிந்ததால் அவரை தனியே அழைத்து சென்று அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

செருப்புக்குள் மறைத்து வைத்து நூதன முறையில் தங்கம் கடத்தல்
செருப்புக்குள் மறைத்து வைத்து நூதன முறையில் தங்கம் கடத்தல்

அவருடைய செருப்பு வழக்கமான எடையை விட அதிகமாக இருந்ததால் அதனை வெட்டி உள்ளே பார்த்த போது, செருப்புக்கு உள்ளே பேஸ்ட் வடிவில் சுமார் 401.500 கிராம் தங்கம் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்துள்ள அதிகாரிகள் அவரிடம் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு 28 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in