
வாரச்சந்தைக்குச் சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த இளம்பெண்ணை கடத்திச் சென்று இரண்டு நாட்களாக நான்கு பேர் கொண்ட கும்பல் கூட்டுப் பலாத்காரம் செய்த அதிர்ச்சி சம்பவம் ஜார்க்கண்டில் நடைபெற்றுள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலம், சிம்டேகா மாவட்டத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண், வாரச்சந்தையில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது ஆட்டோவில் வந்த இளைஞர், இளம்பெண்ணை வீட்டில் இறக்கி விடுவதாக கூறியுள்ளார். இதை நம்பி ஆட்டோவில் ஏறிய இளம்பெண்ணை, வேறு ஒரு இடத்திற்குக் கடத்திச் சென்றுள்ளார். அங்கு அவரது நண்பர் இருந்துள்ளார். அவர்கள் இருவரும் சேர்ந்து இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தனர்.
இதன் பின் அந்த இளம்பெண்ணை அடுத்த நாள் ஒரு குடியிருப்புக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு இளம்பெண்ணை நான்கு பேர் பாலியல் பலாத்காரம் செய்தனர். இதன் பின் வில்லியம் சவுக் பகுதி அருகே இளம்பெண்ண ஆட்டோவில் அழைத்துச் சென்று அவர்கள் விட்டு விட்டுச் சென்றுள்ளனர். இதுகுறித்த இளம்பெண் ,ஜல்தேகா காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
இதன் பேரில், பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட 4 பேரையும் போலீஸார் நேற்று கைது செய்துள்ளனர். அவர்கள் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இளம்பெண்ணை மருத்துவப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். நான்கு பேர் கொண்ட கும்பலால் இரண்டு நாட்களாக இளம்பெண் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் ஜார்க்கண்ட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.