கண் எதிரே 3 வயது மகனை பறிகொடுத்த தந்தை: கண் இமைக்கும் நேரத்தில் நடந்த சோகம்

கண் எதிரே 3 வயது மகனை பறிகொடுத்த தந்தை: கண் இமைக்கும் நேரத்தில் நடந்த சோகம்

தந்தையின் கண் எதிரே 3 வயது மகன் லாரியில் சிக்கி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சோக சம்பவம் திருச்சியில் நடந்துள்ளது.

திருச்சி மாவட்டம், துறையூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அம்மாபட்டியை சேர்ந்த சுரேஷ் (35)- சரஸ்வதி (32) தம்பதிக்கு லித்திஸ் என்கிற 3 வயது குழந்தையும், ஒரு கை குழந்தை ஒன்றும் உள்ளது. இன்று காலை சுரேஷ் தனது இருசக்கர வாகனத்தில் தனது மகன் லித்திஸுடன் காளிப்பட்டியை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்பொழுது சேலம் மாவட்டம், பொட்டியாபுரம் கிராமத்தில் இருந்து அம்மாபட்டிக்கு செங்கல் ஏற்றி லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது.

லாரி அருகில் வந்தபோது நிலைதடுமாறி சுரேஷும், அவரது மகனும் பின் சக்கரத்தில் விழுந்துள்ளனர். இதில், லித்திஸின் தலையில் சக்கரம் ஏறி இறங்கியதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சிறுவனின் உடலை கைப்பற்றிய துறையூர் காவல் துறையினர், பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், லாரி டிரைவர் சேலம் மாவட்டம் பொட்டியபுரம் கிராமத்தை சேர்ந்த சேட்டு (50) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in