`நம்பி போனேன், ஆபாச வீடியோ எடுத்துவிட்டனர்'- பேராசிரியரை மிரளவைத்த பெண்கள் கைது

`நம்பி போனேன், ஆபாச வீடியோ எடுத்துவிட்டனர்'- பேராசிரியரை மிரளவைத்த பெண்கள் கைது

சென்னையில் என்.ஐ.டி பேராசிரியருக்கு மயக்க மருந்து கலந்து கொண்டு ஆபாச படம் எடுத்து மிரட்டல் விடுத்த 3 பெண்கள் உட்பட 4 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

சென்னை அயனாவரம் முத்தம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் (60). இவர் தரமணியில் உள்ள மத்திய அரசின் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி டீச்சர்ஸ் டிரைனிங் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் பேராசிரியராக வேலை பார்த்து வருகின்றார். இந்நிலையில் இவரது வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வரும் ஆர்த்தி என்பவர் மூலம் கோயம்பேட்டை சேர்ந்த ராதா(40) என்பவரது அறிமுகம் கிடைத்துள்ளது.

பின்னர் ராதா சொந்தமாக தொழில் செய்ய வேண்டி பேராசிரியர் ராஜேந்திரனிடம் 4.50 லட்ச ரூபாய் கடனாக பெற்றுள்ளார். பல ஆண்டுகள் ஆகியும் ராதா வாங்கிய கடனை திருப்பி தராததால் 2019-ம் ஆண்டு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மோசடி வழக்கு தொடர்ந்துள்ளார் ராஜேந்திரன். இது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில் வழக்கு விசாரணைக்கு நீதிமன்றத்தில் ராதா ஆஜராகாததால் நீதிமன்றம் அவருக்கு பிடியாணை பிறப்பித்து உத்தரவிட்டது. இதனால் பயந்து போன ராதா, உடனே ராஜேந்திரனை செல்போனில் தொடர்பு கொண்டு மன்னிப்பு கேட்டதுடன் கொடுங்கையூரில் உள்ள தனது தோழி வீட்டிற்கு வந்து பணத்தை பெற்று கொள்ளுமாறு தெரிவித்துள்ளார்.

இதனை நம்பி ராஜேந்திரன் ராதா கூறியதுபோல் கொடுங்கையூர் லட்சுமியம்மன் கோயில் தெருவில் உள்ள ராதாவின் தோழி புஷ்பா(49) என்பவர் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு ராதா மற்றும் அவரது தோழி புஷ்பா(49), லட்சுமி(30), அவரது கணவர் முருகன்(40) ஆகியோர் இருந்துள்ளனர். பின்னர் ராதா வீட்டிற்கு வந்த ராஜேந்திரனுக்கு தண்ணீரில் மயக்க மருந்து கலக்கி கொடுத்துள்ளார். இதனை வாங்கி குடித்த ராஜேந்திரன் அங்கேயே மயங்கி விழுந்த நிலையில் ராதா, புஷ்பா, லட்சுமி அவரது கணவர் முருகன் ஆகிய நான்கு பேரும் சேர்ந்து ராஜேந்திரனை நிர்வாணமாக்கி பின்னர் லட்சுமியுடன் நெருக்கமாக இருப்பது போல் ஆபாச வீடியோ எடுத்துள்ளனர்.

முருகன்
முருகன்

பின்னர் மயக்கம் தெளிந்து ராஜேந்திரன் தனக்கு என்ன நடந்தது என ராதாவிடம் கேட்டுவிட்டு பணத்தை கேட்டுள்ளார். உடனே ராதா, ராஜேந்திரனின் ஆபாச வீடியோவை காண்பித்து பணம் தராவிட்டால் சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் மன உளைச்சல் அடைந்த ராஜேந்திரன் இதுகுறித்து கொடுங்கையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய போலீஸார், பேராசிரியர் ராஜேந்திரனை நிர்வாணமாக படம் எடுத்து மிரட்டல் விடுத்த ராதா, புஷ்பா, லட்சுமி அவரது கணவர் முருகன் ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in