குளிக்கச் சென்றபோது பரிதாபம் - நீரில் மூழ்கி 2 மாணவர்கள் பலி

குளிக்கச் சென்றபோது பரிதாபம் - நீரில் மூழ்கி 2 மாணவர்கள் பலி

செம்பரம்பாக்கம் ஏரியில் மூழ்கி பனிரெண்டாம்வகுப்பு மாணவர் ஒருவரும், குளத்தில் மூழ்கி கல்லூரி மாணவர் ஒருவரும் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை, குன்றத்தூர் நால்ரோடு சந்திப்பு பகுதியைச் சேர்ந்தவர் மோகன். இவரது மகன் ஜெகதீசன்(17) இவர் கோவூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் டூ படித்து வந்தார். இவர் நேற்று தன் நண்பர்களுடன் செம்பரம்பாக்கம் ஏரியில் குளிக்கச் சென்றார். நீச்சல் தெரியாததால் கரையில் அமர்ந்து குளித்துக் கொண்டு இருந்தார். அப்போது அவரது நண்பர்கள் அவரை ஆழமான பகுதிக்கு அழைத்துச் சென்றனர். இதில் நீரில் மூழ்கி மாணவர் ஜெகதீசன் பரிதாபமாக உயிர் இழந்தார். இதுகுறித்து குன்றத்தூர் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மற்றொரு சம்பவம்

விழுப்புரம் மாவட்டம் ஏந்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர். அவரது மகன் கோகுல்(22) இவர் திண்டிவனத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்துவந்தார். முன்னூர் கிராமத்தில் சிவன் கோவில் குளத்தில் குளிக்க படிக்கட்டில் ஏறினார். அப்போது கால் தவறி கீழே விழுந்தார். மரக்காணம் தீயணைப்புத் துறையினர் கோகுல் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in