முந்தியபோது சாலையில் சறுக்கிய பைக்... ஏறி இறங்கியது பேருந்து சக்கரம்: பறிபோன உயிர்கள்

முந்தியபோது சாலையில் சறுக்கிய பைக்... ஏறி இறங்கியது பேருந்து சக்கரம்: பறிபோன உயிர்கள்

அரசு பேருந்தை முந்திச் செல்ல முயன்றபோது இருசக்கர வாகனம் நிலைத் தடுமாறி விழுந்ததில் சக்கரம் ஏறி இறங்கியதில் இளம்பெண் உள்பட 2 பேர் உயிரிழந்தனர். இந்த சோக சம்பவம் கோவையில் நடந்துள்ளது.

கோவை, சவுரிப்பாளையம் பிள்ளையார் கோயில் வீதியை சேர்ந்தவர் மனோஜ். இவர் இலங்கைத் தமிழ் பெண்ணான ஆர்த்தியை தனது இருசக்கர வாகனத்தில் இன்று அழைத்துச் சென்றுள்ளார். அப்போது, செல்வபுரம் அருகே அவர்கள் சாலையில் சென்று கொண்டிருந்தபோது பேருந்தை முந்திச் செல்ல முயன்றுள்ளனர்.

அப்போது, நிலைத் தடுமாறி மனோஜ் மற்றும் ஆர்த்தி ஆகியோர் பேருந்தின் முன்பக்க சக்கரத்தில் விழுந்தனர். இதில் இரண்டு பேர் மீதும் பேருந்து சக்கரம் ஏறி இறங்கியதால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இரண்டு பேரின் உடல்களை கைப்பற்றிய காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர், பேருந்து ஓட்டுநரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in