கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பிரவீன், தமிழ் நீதி
கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பிரவீன், தமிழ் நீதிBG

விடிஞ்சா ஆட்டோ ஓட்டுநர்... ராத்திரிகளில் கொடூர கொலை; கொள்ளை.. அதிர வைத்த இளைஞர்!

தஞ்சாவூரில் மது போதையில் இருந்த வாலிபரை கடத்திச் சென்று, அடித்து கொலை செய்து அவரிடமிருந்து பணம், செல்போன், பைக் உள்ளிட்டவற்றை திருடி சென்ற கொலையாளிகள் இரண்டு பேரை போலீஸார் கைது செய்தனர்.

தஞ்சை நாஞ்சிக்கோட்டை வடக்கு தெருவில் வசித்து வந்தவர் பிரகாஷ் (41). இவர் தஞ்சை மருத்துவக் கல்லூரி சாலை ரகுமான் நகரில் உள்ள அசைவ உணவகத்தில் சிக்கன் கிரில் மாஸ்டராக பணியாற்றி வந்தார். கடந்த 16ம் தேதி வேலைக்கு சென்ற பிரகாஷ் அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. மேலும் அவருடைய செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த பிரகாஷின் மனைவி கமலா தேவி, தனது உறவினர்களுடன் சேர்த்து பிரகாஷ் வேலைப் பார்த்த இடம் உட்பட பல்வேறு இடங்களில் தேடி அலைந்து உள்ளார். ஆனால் எங்கு தேடியும் பிரகாஷ் குறித்து எந்த தகவலும் கிடைக்காததால், தஞ்சை மருத்துவக் கல்லூரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

கொலை செய்யப்பட்ட பிரகாஷ்
கொலை செய்யப்பட்ட பிரகாஷ்BG

இந்நிலையில் தஞ்சை சரபோஜி கல்லூரியின் பின்புறம் உள்ள அடர்ந்த மரங்கள் வளர்ந்த வனப்பகுதியில் ரத்தக்காயத்துடன் சடலம் ஒன்று கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்குச் சென்ற போலீஸார் சோதனை நடத்திய போது, அது மாயமான பிரகாஷ் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு போலீஸார் அனுப்பி வைத்தனர். பிரகாஷ் அடித்துக்கொல்லப்பட்டு இருக்கலாம் என போலீஸார் சந்தேகம் தெரிவித்த நிலையில், அப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களை தீவிரமாக ஆய்வு மேற்கொண்டனர்.

தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம்
தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம்

அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த பிரகாஷை வேறு ஒருவர் அழைத்து செல்வதும், அவரது பின்னால் மற்றொரு இருசக்கர வாகனம் செல்வதும் பதிவாகி இருந்தது. இதையடுத்து அதிலிருந்து காட்சிகளை வைத்து தஞ்சை ரெட்டிபாளையம் மேட்டு தெருவை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் தமிழ் நீதி (39) என்பவரை போலீஸார் சுற்றிவளைத்து பிடித்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியானது.

சம்பவம் நடந்த அன்று இரவு குடிபோதையில் இருந்த பிரகாஷ் வாகனத்தை இயக்க முடியாமல் தள்ளாடி உள்ளார். இதைப் பார்த்த ஆட்டோ ஓட்டுநர் தமிழ் நீதி, அவரிடம் இருந்து செல்போன் மற்றும் பணத்தை பறிக்க முடிவு செய்துள்ளார். தனது நண்பரான அணில் நகரை சேர்ந்த பிரவீன் என்கிற சனி பிரவீன் (28) என்பவருடன் சேர்ந்து அவரை பின்தொடர்ந்து உள்ளார். ஒரு கட்டத்தில் வாகனத்தை இயக்க முடியாமல் பிரகாஷ் தவறி விழுந்த போது, இவர், பிரகாஷூக்கு உதவுவது போல் நடித்து அவரது வாகனத்தை எடுத்துக்கொண்டு அருகில் இருந்த வனப்பகுதிக்கு சென்றுள்ளனர்.

அங்கு பிரகாஷை அடித்து உதைத்து அவரிடம் இருந்து செல்போன், பணம் மற்றும் பைக் ஆகியவற்றை பறித்துக் கொண்டுள்ளனர். இவ்வாறு தாக்கியதில், குடிபோதையில் இருந்த பிரகாஷ் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த இருவரும் எதுவும் தெரியாதது போல் அங்கிருந்து தப்பி வந்து தங்களது வழக்கமான பணிகளில் ஈடுபட்டுள்ளனர். சிசிடிவி கேமரா காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு போலீஸார் அவர்களை கைது செய்ததையடுத்து தமிழ் நீதி, பிரவீன் ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in