பெங்களூருவில் அதிர்ச்சி... 10 தனியார் பேருந்துகள் எரிந்து நாசம்!
பெங்களூருவில் பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியார் பேருந்துகள் திடீரென தீப்பிடித்து எரிந்து வருவதால் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.
பெங்களூருவின் வீரபத்ரா நகரில் தனியார் சொகுசு பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. அப்போது பேருந்து ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு, அடுத்தடுத்த பேருந்துகளுக்கும் தீ பரவியது. இதில் 5 முதல் 10 தனியார் பேருந்துகள் முற்றிலும் எரிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தீயை அணைப்பதற்காக 2 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன. இதுவரை இந்த விபத்தில் உயிரிழப்புகள் ஏதேனும் நிகழ்ந்துள்ளதா என்பது குறித்து தகவல் வெளியாகவில்லை. மேலும் தீவிபத்திற்கான காரணம் என்ன என்பது குறித்தும் தகவல் வெளியாகவில்லை. தீவிபத்து காரணமாக பேருந்து நிலையம் முழுவதும் கரும்புகை சூழ்ந்துள்ளதால் பெங்களூருவில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

இதையும் வாசிக்கலாமே...
என் சாவுக்கு எம்எல்ஏ தான் காரணம்... கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்த வாலிபர்!
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.... வானிலை மையம் அறிவிப்பு
நாளை கடைசி தேதி.... 2250 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
அப்பாடா.... குறைந்தது தங்கத்தின் விலை... நகைப்பிரியர்கள் ஆறுதல்!
சோகம்... ஆந்திரா ரயில் விபத்தில் பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு....18 ரயில்கள் ரத்து