சென்னைத் திரும்பியுள்ள கெளதம் மேனன் ‘லியோ’ படம் குறித்து அப்டேட் கொடுத்துள்ளார்.
நடிகர் விஜய், த்ரிஷா நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'லியோ’ திரைப்படம் உருவாகி வருகிறது. ஒருமாதமாக காஷ்மீரில் நடந்த இதன் படப்பிடிப்பு கடந்த வாரத்தில் முடிவடைந்தது. கடந்த வாரத்தில் காஷ்மீரில் இருந்து சென்னை திரும்பியுள்ளது படக்குழு.
இந்த நிலையில், காஷ்மீரில் இருந்து சென்னை திரும்பிய கெளதம் மேனன் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அதில், ‘லியோ’ படம் குறித்து அங்கிருந்து ரசிகர்கள் அப்டேட் கேட்க, கெளதம் மேனன் அதுபற்றி கூறுகையில், “ ’லியோ’ படம் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறீர்கள் எனத் தெரியும். அதுபற்றி லோகேஷ் கனகராஜ் எதுவும் சொல்லக்கூடாது என தெரிவித்து இருக்கிறார். ஆனால், ஒரு விஷயம் நான் சொல்ல முடியும். படம் ரொம்ப அற்புதமாக வந்திருக்கிறது என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். விரைவில் சென்னையில் இதன் படப்பிடிப்புத் தொடங்க இருக்கிறது” என்றார்.