பிரபல நடிகர் ராணா மீது நில அபகரிப்பு செய்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் ராணா. இவர் தமிழில் அஜித் நடித்த ‘ஆரம்பம்’ படத்தில் நடித்துள்ளார். பிரபாஸ் நடித்த 'பாகுபலி' திரைப்படத்தில் வில்லனாக மிரட்டியிருப்பார். இவரின் தந்தை தயாரிப்பாளர் சுரேஷ் பாபு. இவர் 'திரிஷ்யம்' மற்றும் தமிழில் வெளியான 'பிரின்ஸ்' படங்களைத் தயாரித்துள்ளார்.
இந்நிலையில் நடிகர் ராணா மற்றும் அவருடைய தந்தை சுரேஷ் பாபு ஆகியோர் மீது ஹைதராபாத்தைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் பிரமோத்குமார் போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.
அந்த புகாரில், தன்னுடைய நிலத்தை ராணா மற்றும் அவருடைய தந்தை சுரேஷ் பாபு ஆகியோர் அபகரித்து விட்டதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் நடிகர் ராணா மற்றும் அவரின் தந்தை சுரேஷ் பாபு ஆகியோர் மீது நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தெலுங்கு திரையுலகில் உச்ச நட்சத்திரமாக உள்ள ராணா மற்றும் பிரபல தயாரிப்பாளரான சுரேஷ்பாபு ஆகியோர் மீது போலீஸில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.