ஆன்மிகக் கதை மூலம் ரீ-என்ட்ரி கொடுக்கும் மீனா?

மீனா
மீனாஆன்மிகக் கதை மூலம் ரீ-என்ட்ரி கொடுக்கும் மீனா?

தமிழில் ரீ-என்ட்ரி கொடுக்க நடிகை மீனா தீவிரமாகக் கதை கேட்டு வருகிறார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த மீனா, திருமணம், குழந்தை என்றான பிறகு மலையாளம், தெலுங்கு சினிமாக்களில் கேரக்டர் ரோல்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். தமிழில் கடந்த 2011-ம் ஆண்டு ‘தம்பிக்கோட்டை’ படத்திற்குப் பிறகு சமீபத்தில் ‘அண்ணாத்த’ படத்தில் நடித்தார். மேலும், தனது கணவர் இழப்பில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருபவர் தற்போது பழையபடி கதைகளைக் கேட்டுத் தேர்ந்தெடுத்து வருகிறார்.

அந்த வகையில், இப்போது பழநி முருகனை மையமாகக் கொண்டு ஆன்மிகக் கதை ஒன்றை இயக்குநர் ஒருவர் சொல்லி இருக்கிறார். அந்தக் கதைப் பிடித்துப் போகவே இதன் மூலம் தனது ரீ-என்ட்ரி கொடுக்கத் தயாராகிறார் மீனா. திரைத்துறைக்கு வந்து 40 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி, சமீபத்தில் நடந்த ‘மீனா40’ என்ற நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டப் பல பிரபலங்கள் கலந்து கொண்டதும் அவருக்கு மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in