
‘தி லெஜண்ட்’ திரைப்படம் ஓடிடியில் வெளியாக தாமதமானது ஏன்? என இயக்குநர்கள் பதிலளித்துள்ளனர்.
இயக்குநர்கள் ஜேடி-ஜெர்ரி இயக்கத்தில் சரவணன் நடிப்பில் ‘தி லெஜண்ட்’ திரைப்படம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் வெளியானது. படம் வெளியாகி ஆறு மாதங்கள் ஆன நிலையில், படம் நேற்று டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் வெளியானது. இத்தனை மாதங்கள் கழித்து படம் ஓடிடியில் வெளியானது குறித்து இயக்குநர்கள் பகிர்ந்து கொண்டதாவது, ‘இந்தப் படத்தின் தயாரிப்பாளர் சரவணன் சார். இந்தப் படத்திற்கு ஓடிடியில் நிறைய டிமாண்ட் இருந்தது. தயாரிப்பாளர் அவர் என்பதால் அவரே முடிவு எடுக்கக் காத்திருந்தோம்.
அடுத்து ஒரு பெரிய அறிவிப்புடன் படத்தின் ஓடிடி குறித்தான அறிவிப்பையும் வெளியிட சரவணன் சார் காத்திருந்தார். பிறகு என்ன நினைத்தாரோ தெரியவில்லை. படத்தை ஓடிடியில் வெளியிட்டுள்ளார். படம் திரையரங்குகளில் வெளியானபோது பலரும் ட்ரோல் செய்தனர். ஆனால், இப்போது பல தரப்பில் இருந்தும் பாராட்டுகள் பெற்று வருகிறது’ என்றார்.