இப்படியொரு வாழ்வை யாரால் வாழ முடியும்? -மாளவிகா மோகனன் மகிழ்ச்சி

நடிகை மாளவிகா மோகனன்
நடிகை மாளவிகா மோகனன்

தென்னிந்திய திரைப்படங்களில் பணியாற்றுவதை அதிகம் விரும்புவதாக நடிகை மாளவிகா மோகனன் தெரிவித்துள்ளார்

தமிழில், ரஜினியின் ’பேட்ட’, விஜய்யின் ’மாஸ்டர்’ படங்களில் நடித்தவர் மாளவிகா மோகனன். இப்போது தனுஷின் ’மாறன்’ படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது. இந்தியில் ’பியாண்ட் த கிளவுட்ஸ்’ என்ற படத்தில் நடித்திருக்கும் மாளவிகா, இப்போது ‘யுத்ரா’ என்ற இந்திப் படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் அவர் அளித்த பேட்டியில், தென்னிந்திய திரைப்படங்களில் பணியாற்றுவதை விரும்புவதாகத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியதாவது:

“தென்னிந்திய சினிமாவில் நடிப்பதை அதிகம் விரும்புகிறேன். அதோடு அவர்கள் சிறப்பாகத் திட்டமிட வேண்டும் என்றும் நினைக்கிறேன். ஷெட்யூல்படி ஒரு காட்சி இன்று எடுக்கப்படவில்லை என்றால் அடுத்த நாள், அடுத்த நாள் என தள்ளப்படுகிறது. இதனால் கால்ஷீட் பிரச்சினை ஏற்படுகிறது.

அதோடு கடைசி நேரத்தில் வசனங்கள் கொடுக்கப்படுகின்றன. அதனால் நாம் தயாராவது கடினமாக இருக்கிறது. இந்தி சினிமாவுக்கும் தென்னிந்திய சினிமாவுக்குமான கலாச்சாரம் வேறாக இருந்தாலும் பல்வேறு பின்னணி கொண்ட மனிதர்களைச் சந்திக்க முடிகிறது.

சினிமாவில் நடிகையாக, உங்கள் அனுபவம் எப்படி இருக்கிறது என்று கேட்கிறார்கள். சிறப்பாக இருக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள சிறு கிராமத்தில் இருந்து போர்ச்சுக்கலின் அழகான தீவுவரை படப்பிடிப்புக்காக செல்வது இனிமையாக இருக்கிறது. இது போன்ற ஒரு வாழ்க்கையை நடிகர்கள், இயக்குநர்களைத் தவிர வேறு யாரால் வாழ முடியும்?”.

இவ்வாறு மாளவிகா மோகனன் கூறியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in