விஜய் வைத்த ஒற்றைக் கோரிக்கை: 200 ஊழியர்களுக்கு வாழ்க்கை

விஜய் வைத்த ஒற்றைக் கோரிக்கை: 200 ஊழியர்களுக்கு வாழ்க்கை

பெப்சி ஊழியர்கள் பலனடையும் வகையில், ‘தளபதி 66’ படத்தின் படப்பிடிப்பை சென்னையில் நடத்தவேண்டும் என்று படக்குழுவை நடிகர் விஜய் கேட்டுக்கொண்டதை அடுத்து படப்பிடிப்பு சென்னையில் நடக்க உள்ளது.

விஜய் நடித்துள்ள பீஸ்ட் படம் கடந்த 13-ம் தேதி வெளியான நிலையில், இந்தப் படம் எதிர்மறையான விமர்சனங்களை பெற்றுவந்தது. அதேநேரத்தில், இந்த படம் விரைவில் 100 கோடி ரூபாய் வசூலை நெருங்க உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தப் படத்தை தொடர்ந்து, நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘தளபதி 66’ படத்தை, பிரபல தெலுங்கு இயக்குநரான வம்சி பைடிபள்ளி இயக்கி வருகிறார். தற்காலிகமாக ‘தளபதி 66’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படம், தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகி வருகிறது.

பிரபல தெலுங்கு தயாரிப்பாளரான தில் ராஜு தயாரித்து வரும் இந்தப் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நிறைவடைந்துள்ளது. இதையடுத்து அடுத்தகட்ட படப்பிடிப்பு நடைபெற உள்ளநிலையில், தமிழ் திரையுலகைச் சேர்ந்த பெப்சி (FEFSI) ஊழியர்கள், பலன் அடையும் வகையில், சென்னையில் படப்பிடிப்பு நடத்துமாறு நடிகர் விஜய் படக்குழுவை கேட்டுக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக 75 சதவீத படப்பிடிப்பை ஹைதராபாத்தில் நடத்த திட்டமிட்டநிலையில், விஜய் கேட்டுக்கொண்டதால், சென்னையில் இருக்கும் ஸ்டூடியோ ஒன்றில் பிரம்மாண்ட செட் அமைக்கும் பணி நடந்து வருகிறது. பெரும்பாலான காட்சிகளை சென்னையிலும், மீதமுள்ள காட்சிகளை பிற மாநிலங்களிலும் படமாக்க உள்ளனர். விஜய்யின் இந்த செயல் குறித்து அறிந்த ரசிகர்களும், பெப்சி ஊழியர்களும் அவரை பாராட்டி வருகிறார்கள். விஜய்யின் இந்த செயலால் 100 முதல் 200 ஊழியர்கள் வரை பயன் அடைவார்கள் என்று கூறப்படுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in