`தளபதி66' படத்தின் 2-ம் கட்ட படப்பிடிப்பு நிறைவு: சென்னை திரும்பினார் விஜய்!

`தளபதி66' படத்தின் 2-ம் கட்ட படப்பிடிப்பு நிறைவு: சென்னை திரும்பினார் விஜய்!

நடிகர் விஜய் 'தளபதி 66' படத்திற்கான இரண்டாவது கட்ட படப்பிடிப்பை முடித்து விட்டு சென்னை திரும்பி இருக்கிறார்.

விஜய்
விஜய்

நெல்சன் இயக்கத்தில் 'பீஸ்ட்' படத்திற்குப் பிறகு நடிகர் விஜய் 'தோழா' படம் இயக்கிய வம்சி இயக்கத்தில் தனது 66-வது படத்தில் நடித்து வருகிறார். இவருக்குக் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். 'மாஸ்டர்' படத்தில் இசையமைக்க முதலில் ஒப்பந்தமாகி பின்பு விலகிய தமன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். படத்தில் நடிகர் சரத்குமார், பிரகாஷ்ராஜ், யோகிபாபு, ஷ்யாம், சம்யுக்தா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

விஜய் மற்றும் பிரகாஷ்ராஜ்
விஜய் மற்றும் பிரகாஷ்ராஜ்

இந்த படத்தினை தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார். தமிழ் தெலுங்கு என இரு மொழிகளிலும் படம் உருவாகி வருகிறது. முழுக்க முழுக்க தமிழ்ப் படமாக இது உருவாகும் என நடிகர் விஜய் தனது சமீபத்திய பேட்டி ஒன்றில் குறிப்பிட்டிருந்தார். இதுமட்டுமில்லாமல் 'பூவே உனக்காக', 'காதலுக்கு மரியாதை' என விஜய்யின் ஆரம்பக் கால படங்களைப் போல இதுவும் ஒரு குடும்ப பாங்கான படமாக இருக்கும் எனத் தயாரிப்பாளர் தில் ராஜூ தனது பேட்டியில் தெரிவித்திருந்தார். படத்தின் பூஜை சமீபத்தில் போடப்பட்டது. முதல் பாடல் சென்னையில் படமாக்கப்பட்டு முதல் கட்ட படப்பிடிப்பும் சென்னையில் முடிவடைந்தது. இரண்டாவது கட்ட படப்பிடிப்பு இந்த மாத ஆரம்பத்தில் ஹைதராபாத்தில் தொடங்கியது. ஒரு மாதம் முடிவடைந்த நிலையில் இப்பொழுது இதன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்திருக்கிறது.

இதனை அடுத்து நடிகர் விஜய் நேற்று இரவு சென்னை திரும்பியிருக்கிறார். சென்னை விமான நிலையத்தில் அவரது வீடியோ இணையத்தில் இப்போது ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது. 'கில்லி' படத்திற்குப் பிறகு நடிகர் பிரகாஷ்ராஜும் விஜய்யும் இணைந்து இந்த படத்தில் நடிக்கின்றனர். சில நாட்களுக்கு முன்பு நடிகர் பிரகாஷ்ராஜ் விஜய்யுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, 'ஹாய் செல்லம்ஸ்! வீ ஆர் பேக்' என ட்விட் செய்திருந்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in