பாலியல் வன்கொடுமை வழக்கில் தலைமறைவு நடிகருக்கு உதவிய பிரபல நடிகர்!

பாலியல் வன்கொடுமை வழக்கில் தலைமறைவு நடிகருக்கு உதவிய பிரபல நடிகர்!

பாலியல் வன்கொடுமை வழக்கில் தலைமறைவான நடிகருக்கு உதவியதாக பிரபல நடிகரிடம் போலீஸார் விசாரணை நடத்தியுள்ளனர்.

மலையாள நடிகரும், தயாரிப்பாளருமான விஜய் பாபு மீது நடிகை ஒருவர் பாலியல் வன்கொடுமை புகார் கூறியிருந்தார். இது தொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு போலீஸார் சம்மன் அனுப்பினர். இதனால் விஜய்பாபு, வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றார். கொச்சி போலீஸார் அவர் பாஸ்போர்ட்டை முடக்கினர். அவர் சொத்துக்களையும் முடக்க நடவடிக்கை எடுத்தனர்.

இந்நிலையில், அவர் கொச்சி திரும்பினார். விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், " இந்த வழக்கில் வேண்டுமென்றே என்னை சிக்க வைத்துள்ளனர். நீதி துறையின் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. வழக்கு விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைப்பேன். பாலியல் வன்கொடுமை ஏதும் செய்யவில்லை. நடிகையின் சம்மதத்துடனேயே அது நடந்தது. அடுத்தப் படத்தில் வாய்ப்பு வழங்காததால் அவர் இவ்வாறு புகார் கூறியுள்ளார். நான் நிரபராதி என்பதை நிரூபிப்பேன்" என்றார்.

விஜய் பாபு, சைஜு குரூப்
விஜய் பாபு, சைஜு குரூப்

பின்னர் அவரிடம் போலீஸார் 10 மணி நேரம் விசாரணை நடத்தினர். அவருடைய செல்போன்களைக் கைப்பற்றிய போலீஸார் தடயவியல் சோதனைக்கு அனுப்பியுள்ளனர். அதில் நடிகைக்கும் அவருக்கும் நடந்த வாட்ஸ் அப் சாட் உரையாடல்கள், உதவிய நடிகர், நடிகைகள் உள்ளிட்ட விவரங்கள் கிடைக்கும் என்று தெரிகிறது.

இதற்கிடையே தலைமறைவாக இருந்த விஜய் பாபுவுக்கு கிரெடிட் கார்டுகளைக் கொடுத்து மலையாள நடிகர்கள் உட்பட 4 பேர் உதவியுள்ளனர். மலையாள நடிகர் சைஜு குரூப் உட்பட அவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தியுள்ளனர். மற்றவர்களின் பெயர்களை போலீஸார் வெளியிடவில்லை.

நடிகர் சைஜு குரூப், தமிழில், சித்து பிளஸ் 2, மறுபடியும் ஒரு காதல், ஆதிபகவன், தனி ஒருவன் படங்களில் நடித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in