முன்ஜாமீன் மனு விசாரணை ஒத்திவைப்பு: நடிகரை கைது செய்ய தொடர்கிறது தடை!

முன்ஜாமீன் மனு விசாரணை ஒத்திவைப்பு: நடிகரை கைது செய்ய தொடர்கிறது தடை!

மலையாள நடிகரும், தயாரிப்பாளருமான விஜய் பாபு மீது நடிகை ஒருவர் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி கொச்சி போலீஸில் பாலியல் வன்கொடுமை புகார் தெரிவித்திருந்தார். இதையடுத்து ஃபேஸ்புக் லைவில் தோன்றிய விஜய் பாபு, நடிகையின் பெயரை அதில் வெளியிட்டார். இது பரபரப்பானது. இது தொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு அவருக்கு போலீஸார் சம்மன் அனுப்பினர். ஆனால் விஜய் பாபு, வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றார். போலீஸார் அவர் பாஸ்போர்ட்டை முடக்கினர். சொத்துக்களையும் முடக்க நடவடிக்கை எடுத்தனர்.

இந்நிலையில், அவர் கொச்சி திரும்பினார். விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பாலியல் வன்கொடுமை ஏதும் செய்யவில்லை. நடிகையின் சம்மதத்துடனேயே அது நடந்தது. அடுத்த படத்தில் வாய்ப்பு வழங்காததால் அவர் இவ்வாறு புகார் கூறியுள்ளார். நான் நிரபராதி என்பதை நிரூபிப்பேன்" என்றார்.

பின்னர் அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அவருடைய செல்போன்களைக் கைப்பற்றிய போலீஸார் தடயவியல் சோதனைக்கு அனுப்பியுள்ளனர். இந்நிலையில் விஜய் பாபுவின் முன்ஜாமீன் மனு மீதான விசாரணை, கேரள உயர் நீதிமன்றத்தில் இன்று (ஜூன் 7) விசாரணைக்கு வந்தது.

மனுவை விசாரித்த நீதிமன்றம் விசாரணையை வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்தது. அதுவரை அவரை கைது செய்யவும் தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in