‘கடவுள் என் முன்னாடி வந்தால்....’ - விஜய் ஆண்டனியின் வேற லெவல் ட்வீட்!

‘கடவுள் என் முன்னாடி வந்தால்....’ - விஜய் ஆண்டனியின் வேற லெவல் ட்வீட்!

கடவுள் என் முன்னாடி வந்தால் என்ன கேட்பது என்பது குறித்து நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி சுவாரஸ்யமான ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

விஜய் ஆண்டனி வெளியிட்டுள்ள ட்வீட்டில், “கடவுள் என் முன்னாடி வந்தா, ஜாதி மதம் கோயில் சாமியார் எல்லாரையும் உலகத்துல இருந்து எடுத்துட்டு, வறுமை கொலை கொள்ளைய ஒழிசிட்டு, பேசாம நீங்க எங்க கூடவே இருந்துருங்க சார்ன்னு, ரிக்கொஸ்ட்-ஆ கேப்பேன். நீங்க என்ன கேப்பிங்க?” என்று தெரிவித்துள்ளார்

விஜய் ஆண்டனி தொடர்ச்சியாக சமூக நிகழ்வுகள் குறித்த ட்வீட்களை பதிவிட்டு வருகிறார். சில நாட்களுக்கு முன்பாக, “சத்யாவை கொன்று சத்யாவின் அப்பாவின் தற்கொலைக்கு காரணமான சதிஷை, பொறுமையாக விசாரித்து 10 வருஷத்துக்கு அப்புறம் தூக்குல போடாமல், தயவு செய்து, உடனே விசாரித்து, ரயில்ல தள்ளி விட்டு தண்டிக்கும் படி, சத்யாவின் சார்பாக பொது மக்களில் ஒருவனாக, கனம் நீதிபதி அவர்களை கெஞ்சி கேட்டு கொள்கிறேன்” என ட்வீட் செய்தது பரபரப்பை உருவாக்கியது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in