நயன்தாராவுடன் திருமணம்: அசத்தல் அப்டேட் சொன்ன விக்னேஷ் சிவன்!

நயன்தாராவுடன் திருமணம்: அசத்தல் அப்டேட் சொன்ன விக்னேஷ் சிவன்!

நயன்தாராவுடனான தனது திருமணம் மாமல்லபுரத்துக்கு மாற்றப்பட்டது ஏன் என்று இயக்குநர் விக்னேஷ் சிவன் விளக்கம் அளித்திருக்கிறார்.

நடிகை நயன்தாராவும் இயக்குநர் விக்னேஷ் சிவனும் கடந்த ஆறு வருடங்களாகக் காதலித்து வருகின்றனர். இருவரும் சேர்ந்து வாழ்ந்துவந்த நிலையில், இவர்களது திருமணம் குறித்து அவ்வப்போது செய்திகள் வெளியாகி வந்தன. அதுபற்றி இருவரும் எதுவும் தெரிவிக்கவில்லை.

சில மாதங்களுக்கு முன் இவர்களது நிச்சயதார்த்தம் எளிமையாக நடந்தது. நிச்சயதார்த்த மோதிரத்தைக் காண்பித்தபடி, நயன்தாரா வெளியிட்டிருந்த புகைப்படம் அப்போது வைரலானது.

இந்நிலையில் இவர்களின் திருமணம், வரும் 9-ம் தேதி திருப்பதியில் நடக்க இருப்பதாகக் கூறப்பட்டது. திருமணம் நடக்க இருக்கும் மண்டபத்தை இருவரும் பார்த்து வந்ததாகவும் செய்திகள் வெளியாகின. இதற்கிடையே, இவர்களின் திருமணம் மாமல்லபுரத்தில் உள்ள ரிசார்ட் ஒன்றில் வரும் 9-ம் தேதி நடப்பதாக அறிவிக்கப்பட்டது. இதற்கான அழைப்பிதழை உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்களுக்கு இருவரும் அளித்து வருகின்றனர்.

இந்நிலையில் செய்தியாளர்களை இன்று சந்தித்த இயக்குநர் விக்னேஷ் சிவன், “எங்கள் திருமணம் திருப்பதியில் நடப்பதாக இருந்தது. பயண தூரம் உள்ளிட்ட சில காரணங்களால், அங்கு நடத்துவது சிரமம் என்பது புரிந்தது. அதனால் மாமல்லபுரத்தில் உள்ள ரிசார்ட் ஒன்றில் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தோம். நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடக்கிறது. தொடர்ந்து என்னை ஆதரித்து வரும் மீடியாவுக்கு நன்றி” என்று தெரிவித்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in