39 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்த கவிஞர் வைரமுத்து, பாடகி சித்ரா!

இயக்குநர் தங்கர்பச்சானுடன் கவி ஞர் வைரமுத்து, பாடகி  சித்ரா
இயக்குநர் தங்கர்பச்சானுடன் கவி ஞர் வைரமுத்து, பாடகி சித்ரா 39 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்த கவிஞர் வைரமுத்து, பாடகி சித்ரா!

இயக்குநர் தங்கர்பச்சானின் 'கருமேகங்கள் கலைகின்றன' படத்தின் பாடல் பதிவுக்காக கவிஞர் வைரமுத்து, பாடகி சித்ரா இணைந்துள்ளனர்.

தங்கர்பச்சான் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் இசையில், வைரமுத்து எழுதிய பாடல் பதிவானது. இப்பாடல் குறித்து கவிஞர் வைரமுத்து தெரிவித்திருப்பதாவது: சித்ரா பாடிய முதல்பாட்டு 39 ஆண்டுகளுக்குப் முன்பு நான் எழுதிய ’பூஜைக்கேத்த பூவிது’. அந்தப் பாடலை பாடிய அதே பாடகி சித்ரா நான் பாடல் பதிவில் சந்தித்தேன். அதே குரல், அதே கனிவு,அதே பணிவு என்று வைரமுத்து குறிப்பிட்டுள்ளார்.

வைரமுத்து, சித்ரா, தங்கர்பச்சான்
வைரமுத்து, சித்ரா, தங்கர்பச்சான்39 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்த கவிஞர் வைரமுத்து, பாடகி சித்ரா!

இயக்குநர் தங்கர் பச்சான் பாடலை பற்றி குறிப்பிடும் போது, " நான் ஒளிப்பதிவாளனாக அறிமுகமாகிய (மலைச்சாரல்-1990) திரைப்படத்தில் வைரமுத்து பாடல்களை எழுதினார். அப்படத்தில் பாடகி சித்ராவும் பாடினார். எனது இயக்கத்தில் வளரும் வரும் ‘கருமேகங்கள் கலைகின்றன’ திரைப்படத்திலும் மூவருமே இணைந்து பணியாற்றுகிறோம். தொடர்ந்து திரையுலகில் மூவருமே பணியாற்றிக் கொண்டிருக்கின்றோம் என்பது மகிழ்ச்சியை அளிக்கின்றது" என்றார். இதன் பாடல்கள் வெளியீட்டு விழா விரைவில் நடைபெற உள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in