`கீர்த்தி சுரேஷ் கால்ஷீட் கொடுத்தால்தான் அடுத்தக் கட்டப் படப்பிடிப்பு’: `மாமன்னன்’ குறித்து உதயநிதி

`கீர்த்தி சுரேஷ் கால்ஷீட் கொடுத்தால்தான் அடுத்தக் கட்டப் படப்பிடிப்பு’: `மாமன்னன்’ குறித்து உதயநிதி

’’கீர்த்தி சுரேஷ் மேடம் கால்ஷீட் கொடுத்தால்தான் அடுத்தக் கட்டப் படப்பிடிப்பு நடக்கும்’’ என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

’பரியேறும் பெருமாள்’, ‘கர்ணன்’ படங்களை அடுத்து மாரி செல்வராஜ் இயக்கும் படம், `மாமன்னன்’. இதில், உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடிக்கிறார். நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். மலையாள நடிகர் பகத் ஃபாசில், வடிவேலு உட்பட பலர் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்கிறார்.

படத்தை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. முதல் கட்டப் படப்பிடிப்பு சேலம் அருகே நடந்து வந்தது. இதில் உதயநிதி, வடிவேலு பங்கேற்றக் காட்சிகள் படமாக்கப்பட்டன. இப்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்களை, சமூக வலைதளங்களில் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.

அதில், ’’இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. அடுத்த கட்ட படப்பிடிப்பு கீர்த்தி சுரேஷ் மேடம் , பகத் பாசில் தேதி கொடுத்தால்தான் நடக்கும். தயவு செய்து அதுபற்றி கவனத்தில் கொள்ளவும். அனைத்து டார்ச்சர்களுக்கும் ஒன் மோர் காட்சிகளுக்காகவும் ஸாரி, மாரி செல்வராஜ் சார். நன்றி மாமன்னன் படக்குழு’’ எனக் பதிவிட்டுள்ளார்.

அடுத்தக் கட்ட படப்பிடிப்பு இன்னும் சில நாட்களில் தொடங்கும் என தெரிகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in