கரோனாவில் மீண்டதும் அதிரடி போலீஸ் ஆன த்ரிஷா

த்ரிஷா
த்ரிஷா

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நடிகை த்ரிஷா தெலுங்கு படப்பிடிப்பில் கலந்துகொண்டிருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

நாடு முழுவதும் கரோனா தொற்று வேகமாக அதிகரித்து வருகிறது. திரையுலக பிரபலங்கள் உட்பட பலரும் கரோனா தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். இந்த நிலையில், நடிகை த்ரிஷாவும் புத்தாண்டுக்கு முன் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தார். அதற்காக சிகிச்சை பெற்று வந்த அவர் பின்னர் மீண்டார்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பதிவில், ‘நெகட்டிவ்’ என்ற வார்த்தையை கேட்டவுடன் இதுவரை நான் மகிழ்ச்சியடைந்ததே இல்லை. ஆனால், தற்போது முதன் முதலாக மகிழ்ச்சியடைகிறேன். உங்கள் அன்புக்கும் பிரார்த்தனைக்கும் நன்றி. தற்போது, நான் 2022 ஆம் ஆண்டில் இயங்க தயாராகிவிட்டேன் என்று குறிப்பிட்டிருந்தார்.

’பிருந்தா’ வெப் தொடர் படப்பிடிப்பில் த்ரிஷா
’பிருந்தா’ வெப் தொடர் படப்பிடிப்பில் த்ரிஷா

கரோனாவில் இருந்து மீண்ட அவர் தெலுங்கு வெப் தொடரில் படப்பிடிப்பில் பங்கேற்றுள்ளார். ’பிருந்தா’ என்ற இந்த தொடரில் அவர் அதிரடி போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். ஐதராபாத்தில் நடக்கும் இதன் படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ள த்ரிஷா, சில நாய்க் குட்டிகளுடன் போலீஸ் யூனிபார்மில் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் வெளியிட்டுள்ளார்.

சுமார் 3 வருடங்களுக்குப் பிறகு அவர் தெலுங்கில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in