'வணங்கான்' படத்தில் இருந்து விலகியதற்கான காரணம் இதுதான்!: கீர்த்தி ஷெட்டி!

கீர்த்தி ஷெட்டி
கீர்த்தி ஷெட்டி'வணங்கான்' படத்தில் இருந்து விலகியதற்கான காரணம் இதுதான்!: கீர்த்தி ஷெட்டி!

’வணங்கான்’ படத்தில் இருந்து விலகியதற்கான காரணம் குறித்து நடிகை கீர்த்தி ஷெட்டி பேசியுள்ளார்.

இதுதொடர்பாக நடிகை கீர்த்தி ஷெட்டி பேசியதாவது: 'வணங்கான்’ படத்தில் நடிக்க குறிப்பிட்ட தேதிகள் ஒதுக்கி கொடுத்தேன். ஆனால், படம் நின்று போனது. பிறகு அவர்கள் மீண்டும் கேட்ட தேதியில் நான் வேறு படங்களுக்கு தேதி கொடுத்து விட்டதால், என்னால் மீண்டும் ‘வணங்கான்’ படப்பிடிப்பில் இணைய முடியவில்லை. மீண்டும் பாலா சார் படத்தில் நடிக்கும் வாய்ப்புக்காக காத்திருக்கிறேன்” என்றார்.

‘கஸ்டடி’ படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு
‘கஸ்டடி’ படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு'வணங்கான்' படத்தில் இருந்து விலகியதற்கான காரணம் இதுதான்!: கீர்த்தி ஷெட்டி!

இதன் பிறகு ‘கஸ்டடி’ படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் நடிகர் நாகசைதன்யா பேசியதாவது, "'கஸ்டடி' படம் பேசுவதற்கு முன்பு மனோபாலா சாரின் மறைவுக்கு வருத்தம் தெரிவிக்கிறேன். சென்னை சிட்டி என் வாழ்க்கையில் மிகப்பெரிய பங்கு வகிக்கிறது. இங்கு 'கஸ்டடி' பட டிரெய்லர் வெளியிடுவதில் மகிழ்ச்சி. இரண்டு வருடங்களுக்கு முன்னால் வெங்கட்பிரபு சார் என்னிடம் இந்தப் படத்தின் கதை சொன்னபோது எக்சைட்மெண்ட்டாக இருந்தது.

அதே நம்பிக்கை இப்போது பட வெளியீடு வரை இருக்கிறது. அரவிந்த்சாமி சாரை சின்ன வயதில் இருந்து பார்த்து வருகிறேன். அவருடன் இணைந்து நடித்தது எனக்கு பெருமை. கீர்த்தியுடன் இரண்டாவது படம் எனக்கு. ப்ளாக்பஸ்டர் மொமண்ட் என்றால் அது இளையராஜா சார் இசைதான். வெங்கட்பிரபு சார் என்றால் யுவன் இசைதான். இப்போது இளையராஜா சாரும் கூட இருக்கிறார் என்பது பெருமை.

தொழில்நுட்பக்குழு அனைவரும் சிறப்பாக பணியாற்றியுள்ளனர். டீசருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது போல டிரெய்லரும் உங்களுக்கு பிடிக்கும் என நினைக்கிறேன். வெங்கட்பிரபு சாரின் வழக்கமான ஸ்டைல் இதில் மிஸ் ஆகாது. படம் பார்த்து விட்டு சொல்லுங்கள்" என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in