மும்பையில் சிம்புவின் ‘வெந்து தணிந்தது காடு’ படப்பிடிப்பு

நாளை முதல் தொடங்குகிறது
மும்பையில் சிம்புவின் ‘வெந்து தணிந்தது காடு’ படப்பிடிப்பு

சிம்பு நடிக்கும் ’வெந்து தணிந்தது காடு’ படத்தின் அடுத்தகட்டப் படப்பிடிப்பு மும்பையில் தொடங்குகிறது.

வெங்கட் பிரபு இயக்கிய ’மாநாடு' படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு சிம்பு நடிக்கும் படம், ’வெந்து தணிந்தது காடு’. ’விண்ணைத்தாண்டி வருவாயா’, ’அச்சம் என்பது மடமையடா’ படங்களுக்கு பிறகு கவுதம் வாசுதேவ் மேனனுடன் இணைகிறார் சிம்பு. இதனால் இந்தப் படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.

வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் சார்பாக ஐசரி கணேஷ் தயாரித்து வரும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார். ஜெயமோகன் திரைக்கதை எழுதுகிறார். சிம்பு ஜோடியாக சித்தி இட்னானி நடிக்கிறார். ராதிகா சரத்குமார், மலையாள நடிகர் நீரஜ் மாதவ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இந்தப் படத்தின் முதல் ஷெட்யூல் திருச்செந்தூர் அருகே நடந்தது. பின்னர் அடுத்தகட்டப் படப்பிடிப்பு சென்னையில் நடந்து வந்தது. இப்போது மூன்றாம்கட்டப் படப்பிடிப்பு மும்பையில் நடக்கிறது. இதற்காகப் படக்குழு அங்கு முகாமிட்டுள்ளது. நாளை (பிப்.9) முதல் அங்கு படப்பிடிப்பு தொடங்குகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in