மீண்டும் தொடங்கும் `வணங்கான்’ படப்பிடிப்பு!

நடிகர்கள் சூர்யா- அருண்விஜய்
நடிகர்கள் சூர்யா- அருண்விஜய்மீண்டும் தொடங்கும் `வணங்கான்’ படப்பிடிப்பு!

இயக்குநர் பாலாவின் ‘வணங்கான்’ படப்பிடிப்பு மீண்டும் தொடங்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாலா இயக்கத்தில் ‘வணங்கான்’ படப்பிடிப்பு மீண்டும் தொடங்க இருக்கிறது. கடந்த 2018-ல் இயக்குநர் பாலாவின் ‘நாச்சியார்’ படம் ஜோதிகா நடிப்பில் வெளியானது. இதனை அடுத்து அவர் துருவ் விக்ரமின் ‘வர்மா’ படத்தை இயக்கினார். ஆனால், அந்தப் படம் வெளிவருவதற்கு முன்பே படத்தில் திருப்தி இல்லாததால் அது வெளிவரவில்லை என சொல்லப்பட்டது. அதற்கடுத்து நடிகர் சூர்யாவுடன் கடந்த ஆண்டு ‘வணங்கான்’ படத்தை அறிவித்தார் பாலா. முதல் கட்டப் படப்பிடிப்பு தென் தமிழகத்தில் நடைபெற்றது. முதல் கட்டப் படப்பிடிப்பு முடிவடைந்து அடுத்தக் கட்ட படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இயக்குநர் பாலாவுக்கும் சூர்யாவுக்கும் கருத்து மோதல் என்பதால் படம் கைவிடப்படும் நிலையில் இருப்பதாக சொல்லப்பட்டது. ஆனால், நடிகர் சூர்யா படப்பிடிப்பு தளத்தில் இருந்த புகைப்படத்தை வெளியிட்டு அந்த தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

பின்பு, சிறிது நாட்களுக்குப் பின்பு தவிர்க்க முடியாத காரணங்களால் ‘வணங்கான்’ படத்தில் இருந்து தயாரிப்பாளராகவும் நடிகராகவும் விலகுவதாக சூர்யா அறிவித்தார். சூர்யா விலகிய பின்பு அந்த கதாபாத்திரத்தில் நடிகர் அருண் விஜய் நடிக்க இருக்கிறார். இப்போது ‘வணங்கான்’ படப்பிடிப்பு மீண்டும் முதலில் இருந்து பிப்ரவரி முதல் வாரத்தில் தொடங்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கலாம்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in