மீண்டும் தொடங்கியது 'வணங்கான்' படப்பிடிப்பு!

'வணங்கான்’ படத்தில் அருண் விஜய்.
'வணங்கான்’ படத்தில் அருண் விஜய்.மீண்டும் தொடங்கியது 'வணங்கான்' படப்பிடிப்பு!

நடிகர் அருண்விஜய் நடிக்கும் ‘வணங்கான்’ படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியுள்ளது.

இயக்குநர் பாலா இயக்கத்தில் நடிகர் அருண்விஜய், ரோஷினி பிரகாஷ் ஆகியோர் ’வணங்கான்’ படத்தில் நடித்து வருகின்றனர். கடந்த சில வாரங்களுக்கு முன்பு கன்னியாகுமரியில் இதன் முதல் கட்டப் படப்பிடிப்பு நிறைவடைந்தது. தற்போது, இதன் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு சென்னை மகாபலிபுரத்தில் தொடங்கி இருக்கிறது. இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு 15 நாட்கள் வரை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

இதற்கு முன்பு நடிகர் சூர்யா மற்றும் கீர்த்தி ஷெட்டி ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் இப்படத்தில் நடித்து வந்தனர். கிட்டத்தட்ட 40 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், சில பிரச்சினைகள் காரணமாக படத்தின் தயாரிப்பு மற்றும் நடிப்பதில் இருந்து நடிகர் சூர்யா விலகினார். இதனையடுத்து இந்தப் படத்தை இயக்குவதோடு தயாரித்தும் வருகிறார் பாலா. ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்தப் படம் இந்த வருடம் டிசம்பர் மாதம் வெளியாக வாய்ப்புள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in