மீண்டும் ஆரம்பித்திருக்கும் `அயலான்’ படப்பிடிப்பு: வெளியீடு எப்போது?

மீண்டும் ஆரம்பித்திருக்கும் `அயலான்’ படப்பிடிப்பு: வெளியீடு எப்போது?

நடிகர் சிவகார்த்திகேயனின் ‘அயலான்’ படப்பிடிப்பு மீண்டும் ஆரம்பித்து இருக்கிறது.

’நேற்று இன்று நாளை’ படத்தின் இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்டப் பலரது நடிப்பில் ஆரம்பிக்கப்பட்டத் திரைப்படம் ‘அயலான்’. படத்தின் கதைப்படி வேற்றுக்கிரக வாசிகள் கதையில் இருக்கும்படி படமாக்கப்பட வேண்டியத் தேவை இருப்பதால், அதன் கிராஃபிக்ஸ் பணிகள் தரமானதாக உருவாக்கி வருகிறோம் என்றது படக்குழு. இதற்கிடையில் கரோனா, நிதி தொடர்பான பிரச்சினைக் காரணமாக படப்பிடிப்பு தாமதமாகி மீண்டும் இந்த வருடம் ஜனவரியில் தொடங்கி டிசம்பர் மாதம் வெளியிடத் திட்டமிட்டிருந்தனர்.

ஆனால், மறுபடியும் பொருளாதாரப் பிரச்சினைகள் காரணமாக கிராஃபிக்ஸ் பனிகள் தடைப்பட்டு தற்போது அதை சிவகார்த்திகேயன் தீர்த்து வைத்திருக்கிறார். இதனால், படப்பிடிப்பு மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இன்னொரு பக்கம் கிராஃபிக்ஸ் வேலைகளும் தீவிரமாக நடந்து வருகிறது. அடுத்த வருடம் கோடை விடுமுறைக்கு வெளியாக அதிக வாய்ப்புகள் இருக்கிறது எனவும் தெரிகிறது. இதன் படப்பிடிப்பை முடித்து விட்டு மீண்டும் ’மாவீரன்’ படப்பிடிப்பில் சிவகார்த்திகேயன் பங்கேற்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in