`ஜெய்பீம்’ படத்தின் அடுத்த பாகம்: உறுதி செய்த தயாரிப்பாளர்!

`ஜெய்பீம்’ படத்தின் அடுத்த பாகம்: உறுதி செய்த தயாரிப்பாளர்!

’ஜெய்பீம்’ படத்தின் அடுத்த பாகத்திற்கான வேலைகள் தொடங்கப்பட்டிருக்கிறது என அதன் இணைத் தயாரிப்பாளர் உறுதிப்படுத்தி இருக்கிறார்.

ஞானவேல் இயக்கத்தில் நடிகர்கள் சூர்யா, மணிகண்டன், லிஜோ மோல் உள்ளிட்டப் பலர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியானத் திரைப்படம் ‘ஜெய்பீம்’. படம் அமேசான் ஓடிடி தளத்தில் வெளியானாலும் நல்ல வரவேற்பைப் பெற்றது. விமர்சன ரீதியாக வரவேற்பைப் பெற்றாலும், இந்தப் படத்தை முன் வைத்து பல விமர்சனங்களும் விவாதங்களும் நடந்தது. அதே சமயம் படம் பல விருதுகளையும் வென்றது.

அந்த வகையில், கோவாவில் நடைபெற்ற இந்தியன் பனோரம்மா ஃபீச்சர் ஃபிலிம் விழாவில் பல நாடுகளில் இருந்து திரையிடப்பட்ட படங்களில் ‘ஜெய்பீம்’ திரைப்படமும் ஒன்று. இந்தத் திரைப்பட விழாவில் கலந்து கொண்ட படத்தின் இணைத் தயாரிப்பாளர் ராஜசேகர பாண்டியன், ‘ஜெய்பீம்’ படத்தின் அடுத்த பாகத்திற்கான வேலைகள் தொடங்கப்பட்டு இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.

மேலும், ‘ஜெய்பீம்’ படம் குறித்து அவர் பேசும்போது, “இந்தத் திரைப்படம் எங்களுக்கு மட்டுமல்ல, பார்வையாளர்களுக்கும் சந்தோஷம் தரக்கூடிய உண்மையான படமாக இருந்தது. அதனால், இந்தப் படத்தின் முடிவு வரவேண்டும் என்பதற்காக நாங்கள் பேச்சுவார்த்தைத் தொடங்கி உள்ளோம்” என்று கூறியுள்ளார். படத்தின் இயக்குநர் ஞானவேல், இந்தியில் ஒரு படம் மற்றும் சூர்யாவுடன் மீண்டும் ஒரு படம் என பிஸியாக உள்ளார். ‘ஜெய்பீம்’ படத்தின் அடுத்த பாகம் குறித்தான அறிவிப்புகள் அடுத்தடுத்து வரும் என எதிர்ப்பார்க்கலாம்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in