’வாத்தி’ படத்திற்காக தனுஷ் எழுதிய முதல் பாடல் விரைவில் வெளியீடு!

’வாத்தி’ படத்திற்காக தனுஷ் எழுதிய முதல் பாடல் விரைவில் வெளியீடு!

’வாத்தி’ படத்திற்காக நடிகர் தனுஷ் எழுதிய பாடல் படத்தின் முதல் பாடலாக வெளியாக இருக்கிறது.

‘திருச்சிற்றம்பலம்’ பட வெற்றிக்குப் பிறகு நடிகர் தனுஷ் நடிப்பில் தமிழ்- தெலுங்கு என இரு மொழிகளிலும் வெளியாக இருக்கும் திரைப்படம் ‘வாத்தி’. வெங்கி அட்லூரி இயக்கும் இந்தப் படத்தில் தனுஷ் ஜோடியாக நடிகை சம்யுக்தா மேனன் நடிக்கிறார். படத்திற்கு இசை ஜி.வி.பிரகாஷ்குமார். தற்போது படத்தில் இருந்து முதல் சிங்கிள் விரைவில் வெளியாக இருப்பதாக இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அதில் அவர் தெரிவித்திருப்பதாவது, ‘படத்தில் இருந்து முதல் பாடல் விரைவில் வெளியாக உள்ளது. காதல் பாடலாக வெளியாக உள்ள இந்த பாடலை தனுஷ் எழுதி இருக்கிறார்’ எனத் தெரிவித்துள்ளார். ‘வாத்தி’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் டிசம்பர் மாதம் படம் வெளியாகும் என முன்பு தகவல் வந்தது. பின்பு வெளியீடு தள்ளிப் போக வாய்ப்புள்ளது எனவும் சொல்லப்பட்டது. இன்னும் படத்தின் வெளியீடு குறித்து படக்குழு அதிகாரப்பூர்வமாக எதுவும் சொல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in