'எதற்கும் துணிந்தவன்' ரிலீஸ் தேதி அறிவிப்பு!

'எதற்கும் துணிந்தவன்' ரிலீஸ் தேதி அறிவிப்பு!

நடிகர் சூர்யா நடித்துள்ள அதிரடி படமான 'எதற்கும் துணிந்தவன்' மார்ச் 10ம் தேதி வெளியாகும் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் 'எதற்கும் துணிந்தவன்'. படத்தின் நாயகியாக ப்ரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார். சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, இளவரசு, சுப்பு பஞ்சு, திவ்யா துரைசாமி, ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தை ரத்னவேலு ஒளிப்பதிவு செய்துள்ளார். இமான் இசையமைத்துள்ளார்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு கரோனா அச்சுறுத்தலால் பாதிக்கப்பட்டது. கரோனா அச்சுறுத்தல் குறையத் தொடங்கியவுடன் கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கி காரைக்குடி, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ச்சியாக நடந்துவந்த படப்பிடிப்பு கடந்த சில தினங்களுக்கு முன்பு நிறைவடைந்தது.

இப்படத்தை கடந்த பிப்ரவரி 4ம் தேதி வெளியிடப் படக்குழு தீர்மானித்துள்ளது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பையும் படக்குழு நவம்பர் 19ம் தேதி அறிவித்திருந்தது. ஆனால், மீண்டும் கரோனா அச்சுறுத்தலால் படம் ரிலீஸ் தேதி தள்ளிப்போனது. இந்நிலையில், மார்ச் 10ம் தேதி படம் வெளியாகும் என்று சன் பிக்சர்ஸ் நிறுவனம் இன்று அறிவித்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in