போலீஸ் நோட்டீஸ்சுக்கு எதிராக வழக்கு:நடிகை சாய் பல்லவி மனு தள்ளுபடி

போலீஸ் நோட்டீஸ்சுக்கு எதிராக வழக்கு:நடிகை சாய் பல்லவி மனு தள்ளுபடி

நடிகை சாய் பல்லவி தாக்கல் செய்த மனுவை தெலங்கானா உயர் நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.

நடிகை சாய் பல்லவி நடித்த 'விராட பர்வம்' என்ற தெலுங்கு படம் கடந்த மாதம் வெளியானது. படம் தொடர்பாக, அவர் அளித்த பேட்டியில் " 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' படத்தில், பண்டிட்டுகள் எவ்வாறு கொல்லப்பட்டார்கள் என்பதைக் காட்டி இருக்கிறார்கள். இதை மத மோதலாக எடுத்துக்கொண்டால், சமீபத்தில் பசுவை ஏற்றிச் சென்ற இஸ்லாமியரைத் தாக்கி, ஜெய் ஸ்ரீராம் என்று முழக்கமிடச் சொன்னதை என்னவென்று சொல்வீர்கள்? அதற்கும் இதற்கும் என்ன வித்தியாசம்?" என்று கேள்வி எழுப்பி இருந்தார்.

இந்தப் பேச்சு பரபரப்பானது. சமூக வலைதளங்களில் அவருக்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்துகள் தெரிவிக்கப்பட்டன. இதற்கிடையே பஜ்ரங் தளம் அமைப்பைச் சேர்ந்த அகில் என்பவர் சாய் பல்லவி மீது ஹைதராபாத், சுல்தான் நகர் போலீஸில் புகார் அளித்தார்.

இந்நிலையில் சுல்தான் நகர் போலீஸார், இந்த வழக்குக்காக, சாய் பல்லவிக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தனர். அதை ரத்து செய்யுமாறு தெலங்கானா உயர் நீதிமன்றத்தில் சாய் பல்லவி மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம் சாய் பல்லவியின் மனுவை தள்ளுபடி செய்து அவர் கோரிக்கையை நிராகரித்துவிட்டது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in