என் கதைத் தேர்வை ரசிகர்கள் நம்புகிறார்கள் -நடிகை டாப்ஸி

நடிகை டாப்ஸி
நடிகை டாப்ஸி

“நான் புதுமையான கதைகளைத் தேர்வு செய்வேன் என ரசிகர்கள் நம்புகிறார்கள்” என்று நடிகை டாப்ஸி தெரிவித்தார்.

‘ஆடுகளம்’ மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான டாப்ஸி, பிறகு தெலுங்குக்குச் சென்றார். இப்போது இந்திப் படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். பெண் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளில் நடித்துவரும் டாப்ஸி, இந்தியில் முன்னணி நடிகை லிஸ்டில் இடம்பிடித்திருக்கிறர்.

இப்போது அவர் நடித்துள்ள, ‘லூப் லபேடா’ (Looop Lapeta) என்ற இந்திப் படம் நெட்ஃப்ளிக்ஸில் வரும் 4-ம் தேதி வெளியாகிறது. இது ஜெர்மன் கிளாஸிக்கான, ’ரன் லோலா ரன்’ படத்தின் ரீமேக். ஆகாஷ் பாட்டியா இயக்கியுள்ள இந்தப் படத்தில் டாப்ஸியுடன் தஹிர் ராஜ் பாசின், ஷ்ரேயா தன்வர்த்தி உட்பட பலர் நடித்துள்ளனர்.

இந்நிலையில், தனது கதைத் தேர்வை ரசிகர்கள் நம்புகிறார்கள் என்று டாப்ஸி தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறும்போது, ”வித்தியாசமான கதைகளை தேர்வுசெய்வது என் பலமாக இருக்கிறது. நான் புதுமையான கதைகளைத் தேர்வுசெய்வேன் என்று ரசிகர்கள் நம்புகிறார்கள். அதற்காகவே அப்படிப்பட்ட கதைகளை தேர்வுசெய்து நடிக்கவே விரும்புகிறேன். நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகள் தேடிவருகின்றன. சிலர், உங்களுக்காகவே எழுதப்பட்ட கதை என்று கூறுகின்றனர். அது மகிழ்ச்சி அளிக்கிறது. சினிமாவில் இப்போது என் நிலைமை, திருப்தியாகவே இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in