`தவறுக்கு மன்னிப்பு கேட்பதில் வெட்கப்படவில்லை'

உயர் நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார் எஸ்.வி.சேகர்!
`தவறுக்கு மன்னிப்பு கேட்பதில் வெட்கப்படவில்லை'

பெண் பத்திரிகையாளரை அவமதித்த வழக்கில் பாஜகவை சேர்ந்த நடிகர் எஸ்.வி.சேகர் சென்னை உயர் நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார்.

பெண் பத்திரிகையாளரை அவமதிக்கும் வகையிலான பதிவை சமூக வலைதளத்தில் எஸ்.வி.சேகர் சில மாதங்களுக்கு முன்னதாக பகிர்ந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதால் அந்த பதிவுகளை நீக்கினார் எஸ்.வி.சேகர். இதையடுத்து, அந்த பதிவு தொடர்பாக சென்னை காவல் துறையிடம் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் எஸ்.வி.சேகர் மீது மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர், பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்தனர்.

இந்த வழக்குகளை ரத்து செய்யக் கோரி எஸ்.வி.சேகர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதிகள் முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, காவல் துறை தரப்பில், ஒருமுறைகூட எஸ்.வி.சேகர் விசாரணைக்காக ஆஜராகவில்லை என தெரிவிக்கப்பட்டது. அதற்கு, எஸ்.வி.சேகர் தரப்பில், சமூக வலைதளத்தில் செய்யப்பட்ட பதிவு நீக்கப்பட்டதாகவும், அதற்கு மன்னிப்பும் கேட்டதாகவும், வேண்டுமென்றால் நீதிமன்றத்தில் மற்றொரு முறை மன்னிப்பு கேட்க தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

மேலும், தனது தவறுக்கு மன்னிப்பு கேட்பதில் வெட்கப்படவில்லை என கூறி எஸ்.வி.சேகர், நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்பதாக கூறி மனுதாக்கல் செய்தார். அதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், நான்கு புகார்கள் மீதான வழக்குகளிலும் தனித்தனி பிரமாண பத்திரமாக தாக்கல் செய்ய உத்தரவிட்டடு வழக்கு விசாரணையை வரும் 18-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in