நடிகர் சுஷாந்த் சிங் மரணத்திற்கு நீதி கேட்கும் சகோதரி... ஆன்லைன் பிரச்சாரம் தொடங்கி அதிரடி!

சகோதரியுடன் சுஷாந்த் சிங்...
சகோதரியுடன் சுஷாந்த் சிங்...

மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மரணத்திற்கு அவரது சகோதரி ஆன்லைன் பிரச்சாரம் மூலம் நீதி கேட்டுள்ளார். இந்த விஷயம் சுஷாந்த் சிங் ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்துள்ளது.

கடந்த ஜூன், 2020-ல் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மர்மமான முறையில் தனது மும்பை அடுக்குமாடி குடியிருப்பில் இறந்து கிடந்தார். இவரது மரணம் பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது. சிலர் இவரது மரணத்தை தற்கொலை என்று சொன்னாலும் மரணம் குறித்தான மர்மம் இன்னும் விலகவில்லை.

இப்படியான சூழ்நிலையில்தான், மறைந்த சுஷாந்த் சிங்கின் சகோதரி ஸ்வேதா சிங் கிர்த்தி, தனது சகோதரரின் மரணத்திற்கு நீதி கேட்டு ஆன்லைன் பிரச்சாரத்தை (online campaign) தொடங்கியுள்ளார்.

ஸ்வேதா சிங் கீர்த்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், #Nyay4SSRJanAndolan என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கியுள்ளார். இதன் மூலம், தனது சகோதரர் மரணத்திற்கு நீதி கேட்டு வருகிறார். இந்த பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, ஸ்வேதா ஒவ்வொருவரும் தங்கள் மணிக்கட்டில் அல்லது நெற்றியில் சிவப்பு துணியைக் கட்டி, மறைந்த தனது சகோதரருக்கு நீதி கிடைக்க அனைவரையும் வீடியோ வெளியிடும்படி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதற்கான விசாரணையை சிபிஐ துரிதப்படுத்தி விரைவில் உண்மையைக் கண்டறிய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும், தனது சமூகவலைதளப் பதிவில், ”இன்னும் 45 நாட்களில் என் அண்ணன் சுஷாந் மறைந்து 4 ஆண்டுகள் நிறைவடைகிறது. சிபிஐ விரைவில் உண்மையை வெளிக்கொண்டு வரவேண்டும். இந்த விஷயத்தில் நாம் அனைவரும் ஒற்றுமையாக செயல்படுவோம்.

உங்கள் மணிக்கட்டில் அல்லது நெற்றியில் சிவப்பு நிற துணியைக் கட்டி, அந்த தருணத்தைப் படம்பிடித்து, #Nyay4SSRJanAndolan என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி அதைப் பகிர்ந்து கொள்ளுங்கள்" என்று ஸ்வேதா கூறியுள்ளார்.

இதற்கு சுஷாந்தின் ரசிகர்கள் பலரும் தங்கள் ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர். கடந்த மார்ச் மாதத்திலும், ஸ்வேதா இதுபோல் ஒரு வீடியோவை வெளியிட்டார்.

அதில், தனது நடிகர்-சகோதரரின் மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணையை கவனிக்குமாறும் அங்கிருந்து தங்களுக்கு எந்தவொரு தகவலும் வரவில்லை என்றும் பிரதமர் நரேந்திர மோடியை வலியுறுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...

தீவிரவாதிகள் தாக்குதலில் 2 சிஆர்பிஎஃப் வீரர்கள் மரணம்; 6 பேர் படுகாயம்

மார்க் நெக்ஸ்ட்... ஸ்கில்ஸ் ஃபர்ஸ்ட்... பள்ளி மாணவர்களுக்கான டிப்ஸ்!

பீகாரில் இருந்து உ.பி.,க்கு 95 குழந்தைகள் கடத்தல்? - அதிரடியாக மீட்ட குழந்தைகள் நல ஆணையம்!

பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக போராட்டம்... அமெரிக்காவில் கோவை மாணவி கைது!

சல்மான் கான் வீட்டின் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட வழக்கு... போர்ச்சுகல் நாட்டில் அன்மோல் பிஷ்னோய் பதுங்கலா?

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in