நடிகர் சுரேஷ் கோபிக்கு கரோனா தொற்று உறுதி

`நன்றாக இருக்கிறேன்' என ட்வீட்
சுரேஷ் கோபி
சுரேஷ் கோபிhindu

நடிகர் சுரேஷ் கோபிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ``லேசான காய்ச்சலைத் தவிர நன்றாக இருக்கிறேன். அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்'' என ட்வீட் செய்துள்ளார்.

கரோனா மூன்றாவது அலை இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. தினசரி பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பிரபலங்களையும் விடவில்லை தொற்று. நடிகர் கமல்ஹாசன், வடிவேலு, அருண் விஜய், நடிகைகள் கீர்த்தி சுரேஷ், த்ரிஷா உட்பட பலருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது. அவர்கள் சிகிச்சைக்குப் பிறகு குணமடைந்தனர். நடிகர் மம்மூட்டி, குஷ்பு உட்பட சிலர் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், மலையாள நடிகர் சுரேஷ் கோபிக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் தெரிவித்துள்ளார். ’தகுந்த முன்னெச்சரிக்கையுடன் இருந்தும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், தனிமைப்படுத்திக்கொண்டேன். லேசான காய்ச்சலைத் தவிர நன்றாக இருக்கிறேன். அனைவரும் பாதுகாப்பாக இருங்கள். சமூக இடைவெளியைக் கண்டிப்பாகக் கடைப்பிடியுங்கள். கூட்டங்களில் இருந்து விலகி இருங்கள்’ என்று தெரிவித்துள்ளார்.

இவர் தமிழில், அஜித்தின் தீனா, சரத்குமாரின் ’சமஸ்தானம்’, ஷங்கரின் ’ஐ’ உள்பட சில படங்களில் நடித்துள்ளார். விஜய் ஆண்டனியின் ’தமிழரசன்’ படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். மாநிலங்களவை உறுப்பினராகவும் இருக்கிறார். அவர் விரைவில் குணமடைய ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in