நடிகர் மம்மூட்டிக்கு கரோனா தொற்று: படப்பிடிப்பு நிறுத்தம்

நடிகர் மம்மூட்டிக்கு கரோனா தொற்று: படப்பிடிப்பு நிறுத்தம்

நடிகர் மம்மூட்டிக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர் தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்தியாவில் கரோனா தொற்று கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. இந்தத் தொற்றுக்கு திரைத் துறையைச் சேர்ந்தவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை எடுத்து வருகின்றனர். நடிகைகள், ஷோபனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ் போன்றோர் இன்னும் தனிமையில் இருக்கின்றனர். நடிகை த்ரிஷா சமீபத்தில் கரோனா தொற்றில் இருந்து மீண்டார்.

இந்நிலையில், மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டிக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் இப்போது, 'ஒரு சிபிஐ டைரிகுறிப்பு’ படத்தின் ஐந்தாம் பாகமான ’சிபிஐ 5’ படத்தில் நடித்து வருகிறார். இதை கே.மது இயக்குகிறார். முகேஷ், ஜெகதி ஸ்ரீகுமார் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இந்தப் படத்தின் ஷூட்டிங் கொச்சி அருகே நடந்து வந்தது. இதில் பங்கேற்ற மம்மூட்டிக்கு ஜலதோஷம் காரணமாக, தொண்டை கரகரப்பும் காய்ச்சலும் இருந்தது. கரோனா பரிசோதனை செய்து பார்த்தபோது, தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், தனது வீட்டில் தன்னைத் தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார் மம்மூட்டி. படப்பிடிப்புக்கு இரண்டு வாரம் விடுமுறை விடப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in