`ஓடிடி-யால் மிகவும் பாதிக்கப்படுகிறோம்'- கூட்டத்தை கூட்ட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு சென்ற கடிதம்

`ஓடிடி-யால் மிகவும் பாதிக்கப்படுகிறோம்'- கூட்டத்தை கூட்ட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு சென்ற கடிதம்

ஓடிடி வெளியீடு குறித்து ஆலோசிக்க வேண்டும் என தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க பொதுச் செயலாளர் பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், "தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தை தொடங்கிய மறைந்த முன்னாள் தலைவர் கே.ஆர்.ஜி, சங்கத்தின் மூத்த முன்னோடி மறைந்த முன்னாள் தலைவர் ராமநாராயணனின் காலம் வரை திரையுலகம் பொற்காலமாகவும் சீரோடும் சிறப்போடும் சங்கம் செயல்பட்டு வந்துள்ளது என்பதை இந்த நேரத்தில் நினைவு கூறுகிறேன்.

சமீப காலமாக தமிழ் திரைப்படங்களை ஓடிடி-யில் திரையிடுவதால் திரையரங்குகள், தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். ஆகவே ஓடிடி-யில் திரைப்படங்களை வெளியீடு செய்வது பற்றி முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டி உள்ளதால் ஒரு கலந்தாய்வுக் கூட்டம் ஏற்பாடு செய்து அதில் தாங்கள் தங்களுக்கு வசதியான ஒரு தேதியினை தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in