சிவகார்த்திகேயனின் `மாவீரன்’ படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டதா?

சிவகார்த்திகேயனின் `மாவீரன்’ படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டதா?

நடிகர் சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’ திரைப்படம் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

‘டான்’, ‘ப்ரின்ஸ்’ படங்களைத் தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது அஸ்வின் மடோனா இயக்கத்தில் ‘மாவீரன்’ படத்தில் நடித்து வருகிறார். இதில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடிகை அதிதி ஷங்கர் நடிக்கிறார். படத்தின் முதல் பார்வை ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. சென்னையில் இதன் படப்பிடிப்பு சென்று கொண்டிருந்த நிலையில் இது தற்போது நிறுத்தப்பட்டுள்ளதாக் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இயக்குநருக்கும் சிவகார்த்திகேயனுக்கும் இடையில் ஏற்பட்ட மனஸ்தாபமே இதற்குக் காரணம் எனச் சொல்லப்பட்ட நிலையில் படக்குழு அதை முற்றிலும் மறுத்துள்ளது.

சென்னையில் தற்போது கனமழை காரணமாக படப்பிடிப்பு நடத்த முடியாத சூழல் உள்ளது. ஏற்கெனவே திட்டமிட்டபடி 40 நாட்கள் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. மழை காரணமாக தற்காலிகமாகத் தற்போது நிறுத்தப்பட்டுள்ள படப்பிடிப்பு வரும் திங்கள் கிழமையில் இருந்து மீண்டும் தொடங்கும் எனவும் சொல்லப்படுகிறது.

சிவகார்த்திகேயனின் முந்தைய படங்களான ‘டாக்டர்’, ‘டான்’ இரண்டும் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. ஆனால், ‘ப்ரின்ஸ்’ முந்தைய படங்களைப் போல வரவேற்பைப் பெறாததால் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பு ‘மாவீரன்’ படம் மீது அதிகம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in