`இந்தப் படத்துக்கு பிறகு சிம்புக்கு திருமணம் தான்'- இயக்குநர் சொன்ன சென்டிமென்ட் கதை

சிம்பு
சிம்பு `இந்தப் படத்துக்கு பிறகு சிம்புக்கு திருமணம் தான்'- இயக்குநர் சொன்ன சென்டிமென்ட் கதை

‘பத்து தல’ படம் வெளியான பிறகு நடிகர் சிம்பு திருமணம் செய்து கொள்வாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

‘மாநாடு’, ‘வெந்து தணிந்தது காடு’ ஆகிய படங்களின் வெற்றிக்குப் பிறகு நடிகர் சிலம்பரசனின் ‘பத்து தல’ படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த மாத இறுதியில் இந்தப் படம் வெளியாக இருக்கும் நிலையில், இதன் பத்திரிகையாளர்கள் சந்திப்பு சமீபத்தில் சென்னையில் நடந்தது. இதில் நடிகர் சிம்பு, கெளதம் கார்த்திக், இயக்குநர் ஒபிலி கிருஷ்ணா உட்பட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

இதில் பேசிய படத்தின் வசனகர்த்தா ராமகிருஷ்ணா, ”இயக்குநர் கிருஷ்ணாவிடம் எப்போதும் ஒரு சென்டிமென்ட் உண்டு. அவர் வைத்து படம் செய்கிறவர்களுக்கு கண்டிப்பாக கல்யாணம் நடக்கும். ‘ஜில்லுனு ஒரு காதல்’ படத்திற்குப் பிறகு சூர்யா, ஜோதிகாவுக்கு, ‘நெடுஞ்சாலை’ படத்திற்குப் பிறகு ஆரி, ஷிவதா மற்றும் ‘பத்து தல’ படம் கமிட் ஆன பிறகு கெளதம் கார்த்திக்கு திருமணம் நடந்தது. அதுபோல, இந்தப் படம் வெளியான பிறகு சிம்புவுக்கு நல்லது நடக்கும் என எதிர்பார்க்கலாம்” எனப் பேசியுள்ளார். இதுதான் ரசிகர்கள் மத்தியில் சிம்புவின் திருமணம் குறித்தான எதிர்பார்ப்பை மீண்டும் ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in